search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கடன்"

    நமது பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் அவதூறான வி‌ஷயங்களை பேசுகிறார் என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    சித்தார்த் நகர்:

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

    மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி பங்களாவை விட்டு வெளியே வரவில்லை.

    இப்போது தேர்தலில் வந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய போது தங்களிடம் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    ஆனால் பெரும் தொழில் அதிபர்களின் பல கோடி ரூபாய் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது?

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிபடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பேச மட்டுமே செய்வார்கள். எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோள் மக்களுக்கு நன்மை செய்வது அவர்களின் நோக்கமல்ல.


    நமது பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் பாகிஸ்தான் குறித்து கடுமையாக சாடி பேசுவார். மக்கள் பிரச்சினைகளை பேசாமல், மற்றவர்கள் குறித்து அவதூறான வி‌ஷயங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்.

    மக்களிடம் வாக்கு என்று ஒரு வலிமையான சக்தி உள்ளது. அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. எனவே அனைவரும் நன்கு யோசித்து நமக்கு நன்மை செய்வது யார்? என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #rahulgandhi #congress
    உத்தரபிரதேச மாநிலம் தாதாகஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இப்போது கோடிகளில் கடன் வாங்கிய வர்த்தக பிரமுகர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து நாட்டைவிட்டு பறந்துசெல்ல அனுமதிக்கிறார்கள்.

    அதேசமயம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயி கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் சிறையில் தள்ளி விடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்காது. கடனை செலுத்தாத பெரும்புள்ளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கடனை செலுத்தாத ஒரு விவசாயி கூட சிறைக்கு அனுப்பப்படமாட்டார். 

    மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். அதேபோன்று நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #rahulgandhi #congress 
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    திருப்பதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைமைக்கான தகுதிகளில் முக்கியமான தகுதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்னும் குறிப்புடன் எனது பேச்சை தொடங்குகிறேன். அவ்வகையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறோமா, இல்லையா? என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரதமரால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியும் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இந்த நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக பார்க்க வேண்டும்.

    ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் அந்த நாடே பேசுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பலமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ‏மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்னும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஆந்திராவுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை, மேக் இன் இந்தியா, ஸ்டிராட் அப் இந்தியா என பொய்மேல் பொய்யாக நாங்கள் சொல்ல மாட்டோம்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், மத்தியபிரசேதம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். 

    அதேபோல், ஆந்திர மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்காக நிச்சயமாக சிறப்பு மாநில அந்தஸ்தை நாங்கள் அளித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    கூட்டுறவு வங்கிகளில் தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #ADMK #TNMinister #sellurRaju
    சென்னை:

    அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மற்ற மாநிலங்களில் இப்போதுதான் விவசாயிகளை ஏறெடுத்து பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அம்மாவின் அரசு அம்மா ஆட்சியில் இருந்தது முதல் இதுவரை 90 லட்சம் விவசாயிகளுக்கு பல நிலைகளில் ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.

    தானே புயல், வர்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்தன. முதல்-அமைச்சரும் இன்று பல்வேறு உதவிகளை அறிவித்திருக்கிறார். எனவே அந்த மாதிரி ஒருநிலை இப்போது இல்லை. கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முதல்- அமைச்சர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த கடன்கள் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.

    12 லட்சம் விவசாயிகளுக்கு அம்மா ஏறத்தாழ ரூ.5,318 கோடி நிலுவையில் கடன்களை தள்ளுபடி செய்தார். அது போன்ற நிலை இப்போது இல்லை.

    விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொடுத்தது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுதான். அவரும் ஒரு விவசாயி என்பதால் இதை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.


    மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார். அவரது தந்தை காலத்தில் கூட இதை பெற்றுக் கொடுக்கவில்லை.

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது என்பது தவறான தகவல். தகுதியான குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டது. இப்போது ரூ.10 லட்சம் கூட பெற்றுக் கொள்ளலாம்.

    கூட்டுறவு வங்கிகளில் நிறைய பணம் இருக்கிறது. டெபாசிட் அதிகமாக வந்துள்ளது. தகுதியானவர்களை வரச் சொல்லுங்கள். வந்தால் கடன் கொடுக்க நாங்கள் தயார்? நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #sellurRaju
    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    24 மணி நேரத்திற்குள் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விடுத்த எச்சரிக்கைக்கு, உங்களது விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என்று  காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக பதவியேற்ற குமாரசாமி, இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தார்கள்.

    இதற்கிடையே மாநிலத்தில் புதிய அரசு அமைந்து 24 மணி நேரங்களுக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எடியூரப்பா எச்சரிக்கையை விடுத்தார். பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது என காங்கிரஸ் பதிலளித்து உள்ளது.

    அவர்கள் பொதுமக்களின் பணத்தை வீணடிக்க முடியாது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அது அவர்கள் உருவாக்கியதாக இருக்கும். அவர்கள் எங்களை கட்டாயப்படுத்தவும் முடியாது, மிரட்டவும் முடியாது. நாங்கள் பொறுப்பான அரசை நடத்துவோம், பாரதிய ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் செயல்பட முடியாது என காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறிஉள்ளார்.
    முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகள் கடனை 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் கர்நாடகாவில் 28-ந் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார். #yeddyurappa #kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத் தேர்தலில் 77 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இன்று சட்டசபையில் இருந்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர், சட்டசபை வளாகத்தில் பேட்டியளித்த எடியூரப்பா, விவசாயிகள் கடனை குமாரசாமி தலைமையிலான அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என தெரிவித்தார். #yeddyurappa #kumaraswamy
    ×