search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vardha cyclone"

    கூட்டுறவு வங்கிகளில் தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #ADMK #TNMinister #sellurRaju
    சென்னை:

    அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மற்ற மாநிலங்களில் இப்போதுதான் விவசாயிகளை ஏறெடுத்து பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அம்மாவின் அரசு அம்மா ஆட்சியில் இருந்தது முதல் இதுவரை 90 லட்சம் விவசாயிகளுக்கு பல நிலைகளில் ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.

    தானே புயல், வர்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்தன. முதல்-அமைச்சரும் இன்று பல்வேறு உதவிகளை அறிவித்திருக்கிறார். எனவே அந்த மாதிரி ஒருநிலை இப்போது இல்லை. கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முதல்- அமைச்சர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த கடன்கள் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.

    12 லட்சம் விவசாயிகளுக்கு அம்மா ஏறத்தாழ ரூ.5,318 கோடி நிலுவையில் கடன்களை தள்ளுபடி செய்தார். அது போன்ற நிலை இப்போது இல்லை.

    விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தை பெற்றுக் கொடுத்தது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுதான். அவரும் ஒரு விவசாயி என்பதால் இதை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.


    மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக செல்கிறார். அவரது தந்தை காலத்தில் கூட இதை பெற்றுக் கொடுக்கவில்லை.

    அ.தி.மு.க.வைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்படுகிறது என்பது தவறான தகவல். தகுதியான குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டது. இப்போது ரூ.10 லட்சம் கூட பெற்றுக் கொள்ளலாம்.

    கூட்டுறவு வங்கிகளில் நிறைய பணம் இருக்கிறது. டெபாசிட் அதிகமாக வந்துள்ளது. தகுதியானவர்களை வரச் சொல்லுங்கள். வந்தால் கடன் கொடுக்க நாங்கள் தயார்? நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #sellurRaju
    வார்தா புயலில் பலியான 9 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை 2 வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #VardhaCyclone
    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ரவிச்செல்வன் மீன்பிடி படகு டிரைவராக பணி செய்துவந்தார். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயல் வீசியபோது, என் தந்தை உள்பட 9 பேர் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புயலில் சிக்கி படகுடன் 9 பேரும் காணாமல்போயினர். இதுகுறித்து சென்னை மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    என் தந்தை ரவிச்செல்வன், மீனவர்கள் நிர்மல்ராஜ், வினோத் ஆகியோரது உடல் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அரசு அறிவித்து, 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கியது.

    இதற்கிடையில், வார்தா புயலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் அறிவித்தார். இதையடுத்து இந்த இழப்பீடு தொகையை கேட்டு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். இதுவரை அரசு பரிசீலிக்காமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும், இழப்பீடு வழங்கப்படவில்லை.

    எனவே, வார்தா புயலில் பலியான என் தந்தை உள்பட 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. இதை பின்பற்றி தொகையை வழங்க காலஅவகாசம் வேண்டும். அதனால் 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.

    இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் விஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வார்தா புயலில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து 2 வாரத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.  #VardhaCyclone
    ×