search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளக்குகள்"

    • சேதம் அடைந்த மின்னணு கழிவுகளான சுவிட்போர்டுகள், விளக்குகள் டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
    • பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர நடவடிக்கைகள் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்கும் கடைகளின் உரிமை–யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மின்னணு கழிவுகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 14 கோட்டங்களிலும் இந்த மின்னணு கழிவுகளான சேதம் அடைந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின்விசிறிகள், டியூப் லைட்கள், சுவிட்போர்டுகள், விளக்குகள், என டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.

    அவ்வாறு சேகரிக்கப்–பட்டுள்ள பொருட்கள் தஞ்சை திலகர் திடலில் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கூடை தயாரித்தல், பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    இவற்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் திலகர் திடல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதோடு, மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இன்னும் 3 நாட்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சேகரிப்பு பணியில் 15 வாகனங்கள், 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 டன் வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.

    இந்த கழிவுகள் அனைத்தும் மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது"என்றார்.

    • புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா,அக்சயா கண்ணன், டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப்பன், நவீன் குமார், அனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது:-

    ஒழுங்கினசேரி சந்திப்பு முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள் சாலையில் இருபுறமும் உள்ள கழிவு நீர் ஓடையை தூர்வாரி நடை மேடை அமைத்து இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரிய வில்லை. சரி செய்ய பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும்.50-வது வார்டுக்கு உட்பட்ட முகிலன்விளை பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள் ளப்பட்ட பிறகும் கழிவுநீர் ஓடை சீரமைக்கப்பட வில்லை. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவுன்சிலர்களை ஒருங்கி ணைத்து கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இதுவரை கூட்டப் படவில்லை.

    மாநகராட்சி கவுன்சிலுக்கு புதிய சட்டம் இயற்ற அதிகா ரம் இருக்கிறது. அதை பயன்படுத்தி ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தங்க ளது வார்டுகளில் ரூ.50 ஆயிரம் அளவிலான சின்ன சின்ன வேலைகள் செய்ய அதிகாரம் சட்டத்தை இயற்ற வேண்டும். வேலைகள் செய்து முடித்த பிறகு அதற்கான பில்லை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வார்டு களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண் டப்பட்டு மூடப் பட்டுள்ள மூடிகள் சாலை யின் மட்டத்தை விட மேல் உள்ளது. இதனால் விபத்துக்கள் அந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெங்கம் புதூர் ஆளுர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக் கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தற்போது தண்ணீர் கட்டணம் மாநகராட்சி யுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதை மறுபரிசீலனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதைத் தொடர்ந்து அனைத்து பணிகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு வருகிற 2-ந் தேதி அமைச்சர் நேரு வருகை தர உள்ளார். அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது தொடர்பாக கவுன்சிலர் அனைவரும் ஒன்றிணைந்து மனு அதிக நிதி பெற வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 4 மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் மண்டல அலுவலகம் திறக்கப்படும். ஏற்கனவே இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மண்டல அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். மற்றொரு இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகு அனைத்து கமிட்டி களையும் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மேல் குற்றம் சாட்டும் போது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்ட கூடாது. ஆதாரத்துடன் குற்றச்சாட்டினால் அந்த அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புத்தன்அணை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் மாற்றப்பட்டு எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.14 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை.
    • பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து அனைத்து துறைஅதிகாரிகளின் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞான சுந்தரி சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராசு, ஊராட்சி செயலாளர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் வேதாரத்தனம் ,வட்டார கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் நேரில் எடுத்துரைத்தும் மனுக்களும் அளித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தர பாண்டியன், ஊராட்சியில் கஜா புயலுக்கு பிறகு பல்வேறு இடங்களில் சரியானபடி தெரு விளக்குகள் எரிவதில்லை .இதற்கு பலமுறை மின்சார அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும்இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனை உடன் சரி செய்யப்பட வேண்டும்.

    இல்லையென்றால் 15 நாட்களில் மின்சார துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். மேலும் நாலுவேதபதி பகுதியில் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று கட்டப்படும் வீடுகள் மற்றும் பொதுமக்கள் கட்டும் சிறு வீடுகளுக்கு அருகில் உள்ள மணல் எடுத்து பயன்படுத்துவதை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்த கோரிக்கையை ஊராட்சியில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் எடுத்துரைத்தனர் .இதற்குதாசில்தார் ரவிச்சந்திரன் அரசு கட்டிங்களுக்கும் அரசு உதவி பெற்று கட்டப்படும் வீடுகளுக்கும் மற்றும் தனிநபர் விடுகட்டுவதற்கும் அருகில் உள்ள மணலை எடுத்து பயன்படுத்தமுறையான அனுமதிக்கு விண்ணப்பித்தால் பரிசீலித்து அரசு விதிகளுக்கு உட்பட்டுஅனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
    • தேர்பவனியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்..பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சுரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய‌ சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற‌ பொருளில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலய‌அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்டமுதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலய‌உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு ஆலயங்களில் இருந்து வந்திருந்த அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி பேராலய‌ முகப்பில் சிறப்பு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.

    அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தும் தேர்ப வனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    அப்போது ஆலயமணிகள் முழங்கின. வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேர்பவ னியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.

    பேராலய‌ வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    தேர் பவனி‌ நிறைவ டைந்ததும்‌ இன்று (வெள்ளி) மரியாள் தாய்மை யின் தலைப்பேறு‌ என்ற‌ பொருளில்‌ பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா ‌பெருவிழா நிறைவு பெற்றது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

    தேர்பவனியின் போது திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×