search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் அட்டகாசம்"

    • ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது.
    • கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவையில் இருந்து நேற்று நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அப்போது கோவை- மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் 2 குட்டிகளுடன் வந்திருந்த 3 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் அந்த பஸ்சில் பயணித்தவர்கள் அச்சத்தில் அலறினர். மேலும் கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்த தகவலின்பேரில் குந்தா வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கையடக்க சைரன் மூலம் பெரியஅளவில் ஒலி எழுப்பி, நடுரோட்டில் முகாமிட்டு நின்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சாலையில் முகாமிட்டு நின்ற யானைகள், அடர்ந்த காட்டுக்கு திரும்ப தொடங்கின.

    இதற்கிடையே ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக தங்களின் வாகனங்களை பின்னோக்கி இயக்கினர்.

    மேலும் தொடர்ந்து சைரன் ஒலியை எழுப்பி வந்ததால், ஊழியர்களை விரட்டி வந்த காட்டு யானை பின்னர் ஒருவழியாக அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.
    • யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

    தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.

    இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டி விட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடிவனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை 20-க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்தது. பின்னர் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்றது. பின்னர் குட்டிகளுடன் யானைகள் தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

    யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றனர்.

    • பயிர்களை சேதப்படுத்தியது
    • காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன

    ஆம்பூர்:

    ஆந்திரா மாநிலம், நனியாலயா பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக -ஆந்திரா எல்லையான வாணியம்பாடி வன பகுதிக்குள் நுழைந்தது.

    வாணியம்பாடி அருகே உள்ள சிந்தகாமணி பெண்டா, வெலதிகாமணி பெண்டா, மாதகடப்டா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தி நாசம் செய்தன.

    பின்னர் அவைகள் மதகடப்பாவில் இருந்து புறப்பட்டு அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா சென்று அந்த கிராமத்தில் உள்ள வாழை தோட்டம், நெற்பயிர் மற்றும் மாட்டு கொட்டகை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.

    இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட யானைகள் வெங்கடசமுத்திரம் ஊராட்சி, மலைக்காட்டை ஒட்டி உள்ள ராளகொத்தூர் பகுதியில் நெல் மற்றும் மக்காசோளம் உளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மிட்டாளம்மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை மரங்கள், காய்கறி தோட்டம், பூ தோட்டம், நெல் ,கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்நிலையில் தற்போது அந்த காட்டு யானைகள் மிட்டாளத்தை ஒட்டி உள்ள காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன.

    • நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது.
    • அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு, வண்ணாத்தி ப்பாறை, மாவடி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வாழைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி யானைகள் மற்றும் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது. அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது. நேற்று காலை தோட்டங்களுக்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடலூர் வனச்சரகர் முரளிதரனுக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதம் அடைந்த வாழைத்தோட்ட ங்களின் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவ ங்களை தடுத்து நிறுத்த யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்தது
    • ஆஸ்பத்திரியில் நோயாளிகள் இல்லாததால் பெரும் ஆபத்து தவிா்ப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் ஆகும். இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    காட்டுக்குள் தற்போது வறட்சி நிலவுகிறது என்பதால் அங்கு உள்ள வனவிலங்குகள் அடிக்கடி காட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து அங்கு இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    காட்டுக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் வனவிலங்குகளை தடுத்து நிறுத்தும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு விலங்குகளின் அட்டகாசம் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.

    கூடலூா் தாலுகாவில் உள்ள ஓவேலி பாா்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நள்ளிரவில் காட்டு யானைகள் திரண்டு வந்தன.

    அப்போது அவை சுகாதார நிலையத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. மேலும் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நோயாளி களின் படுக்கை மற்றும் மேஜை-நாற்காலிகளை உடைத்து சூறையாடின.

    தொடர்ந்து ஆஸ்பத்திரி யின் பீரோவை தும்பிக்கை யால் அடித்து உடைத்த யானைகள், அதில் இருந்த மருந்துகள், பதிவேடுகள் உள்பட அனைத்துப் பொரு ட்களையும் சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்தன.சுகாதாரநிலைய பணியா ளா்கள் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது காட்டு யானைகள் ஆஸ்பத்திரியை சூறையாடிய விவரம் தெரியவந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த ஊழி யர்கள், இதுகுறித்து சம்ப ந்தப்பட்ட உயரதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனா்.

    மேலும் தகவலறிந்த வனத்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு சேதமதிப்பீடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காட்டு யானைகள் புகுந்தபோது, அங்கு நோயாளிகள் எவரும் இல்லை. எனவே அங்கு அதிா்ஷ்டவசமாக பெரும் ஆபத்து தவிா்க்கப்பட்டது.

    கூடலூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம், பணியாளா்களி டம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது.
    • பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வனப்பகுதிகளில் யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் அடிக்கடி புகுந்து விடுகிறது. மேலும் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சித்தன் குட்டை அய்யம்பாளையம் செல்வ கணேசபுரம் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை தொடர்ந்து அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உடைத்து சுவைத்து தின்று சேதப்படுத்தியது.

    இதையடுத்து ஓட்டு சாலைகள், தண்ணீர் குழாய்கள், கம்பி வேலிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் டிராக்டர் மற்றும் வனத்துறை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது. மேலும் வனத்துறை ஜீப் மற்றும் வாகனத்தை யானை விரட்டி சென்றது. இதையடுத்து அதன் தும்பிக்கையால் தூக்கி அடித்ததில் வாகனம் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வருகிறோம். வாழை மரங்களை நடவு செய்து அறுவடைக்கு வரும் வரை பாதுகாத்து வருகிறோம்.

    ஆனால் வாழைதார்கள் அறுவடைக்கு வரும் முன் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் யானைகள் வருவதால் நாங்கள் அதை விரட்டி செல்லும் போது எங்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம். எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.

    எனவே இது போன்ற காட்டு யானைகளால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க வேண்டும். யானைகள் உருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

    • யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறு வடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.
    • நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தி யதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர்காப்பு காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய 2 யானைகள் குடியூர், கூச்சுவாடி, நெல்லுகுந்தி, அரசச்சூர், சித்தலிங்ககொட்டாய் ஆகிய வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்தன. பின்னர் இந்த யானைகள் விவசாயி பசப்பா என்பவரது நெல் வயலில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன.

    தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பலாப் பழங்களை தின்றும், காய்களை பறித்து கீழே போட்டும் சென்றன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர், மா, பலா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளால் சேதமடைந்த வயல் மற்றும் மரங்களை பார்வையிட்டனர். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
    • பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியில் போதுமான அளவில் உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் திருமூர்த்திமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியதுடன், ஏராளமான தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றன.

    விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.இதனால் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
    • பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, சில சமயங்களில் வீடுகளில் வைத்துள்ள உணவுகளையும் சேதப்படுத்தி செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை புகுந்தது.

    சிறிது நேரம் அந்த யானை அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முயன்றது.

    ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடையே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை யானை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். வீட்டிற்கு வெளியே யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சத்தம் போட்டனர்.

    இருந்த போதிலும் யானை செல்லாமல் அங்கேயே சுற்றியது. இதுகுறித்து மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர்.

    இதற்கிடையே யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப் பல்லி பகுதியில் 2 குட்டிகள் உடன் வந்த 5 யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உமராபாத் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன
    • வனப்பகுதிக்குள் விரட்டினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும் மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் 2 யானைகளும் நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன. அங்கு கோபிநாத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்தன.

    இதனை அறிந்த விவசாயிகள் பட்டாசு, வெடி வெடித்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

    யானைகள் அட்டகா சத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா வி.ஏ.ஓ. தனசேகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    ×