search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அருகே யானைகள் அட்டகாசம்
    X

    ஆம்பூர் அருகே யானைகள் அட்டகாசம்

    • மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×