என் மலர்
நீங்கள் தேடியது "யானைகள் அட்டகாசம்"
- வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சாமிநான் (வயது 41) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு 12 மணியளவில் புகுந்த காட்டு 2 யானைகள் வாழைகளை நாசம் செய்தது.
இதைப்போல் வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து விவசாயி ராமசாமி மற்ற விவசாயிகள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
எனினும் ராமசாமி தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதே போல் கடந்த வாரம் தோட்டத்தில் புகுந்த யானை வாழையை சேதாரம் செய்தது. தொடர்ந்து வாழையை யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து சேதாரம் செய்து வருவதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானையை விரட்ட வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூரை அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகரில் புதிதாக வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஷெட் அமைத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை குட்டியுடன் 2 யானைகள் இந்த பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஷெட்டை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருள்களை வெளியே இழுத்து தின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர்.
அப்போது யானைகள் அங்குள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் பின்புறம் உள்ள திருமலா கார்டன் வழியாக ஜல்லிமேடு புதூருக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் தேவம்பாளையம் வழியாக காட்டுக்குள் சென்றன.
இந்நிலையில் கோவனூரில் உள்ள ரமேஷ் என்பவரின் சோளக்காட்டுக்குள் 3 யானைகள் நேற்று இரவு நுழைந்தது. நீண்டநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானைகள் மீண்டும் நாயக்கன்பாளையம் நோக்கி நகர்ந்தன.
அப்போது மீண்டும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் அவற்றை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். டிசம்பர் மாதம் யானைகள் வலசைக் காலம் என்பதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி வரை இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் இருக்கும்.
எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
- பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோணங்கி அள்ளி, சின்னபங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய் ஆகிய கிராமங்கள் வழியாக சோம்பட்டி பகுதியில் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.
பின்னர் அதன் அருகே அமைந்துள்ள சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக்கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தியுள்ளது.
- சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது.
- சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கிராமங்களில் சுற்றி திரியும் இரண்டு யானைகளை பிடிக்க தருமபுரி மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நான்கு நாட்களாக இரண்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளையும் பொதுமக்களையும் மிரட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஏழு மணிக்கு கோணங்கி அள்ளி, சின்ன பங்கு நத்தம், கவுண்டன் கொட்டாய், கூலி கொட்டாய், ஆகிய கிராமங்கள் வழியாக சோம் பட்டி கிராமத்தில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பவர் கிரேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயில் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு யானைகள் உள்ளே நுழைந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இங்குள்ள பவர் கிரேட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகா ஆந்திரா கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் இங்கிருந்து பகிர்வு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.
தேன்கனிகோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 50 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், காடுலக்கசந்திரம், தின்னூர் கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன.
- ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோவை,
கோவை பேரூர் அருகே தீத்தி பாளையம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது.
இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக யானையின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன. இந்த யானைகள் முதலில் அந்த பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்த மான இடத்திற்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த அரை ஏக்கர் பயிர்களை மேய்ந்தது.
தொடர்ந்து தீத்திபாளையம் கிராமத்தில் உள்ள நடராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை கூட்டங்கள் 2 ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.
மேலும் தோட்டத்தில் தக்காளி பயிர் செய்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது. இதனால் அவருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை மிதித்தும் சேதப்படுத்தின.
- விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதி யை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதேபோல் சாலைகளில் நின்றும் வாகன ஓட்டிகளை அச்சு றுத்தி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் ஜீர் கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் உதயகுமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு எழுந்து வந்த உதயகுமார் தோட்டத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.
அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்து வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்து விவசாயி களை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன் பெயரில் அங்கு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.
அதிகாலை 3 மணி வரை அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் அதன் பின்னரே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
யானை புகுந்ததால் சுமார் 500 வாழைகள் சேதம் அடைந்தன. இதனையடுத்து வனத்துறையினர் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
- நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன
- வனப்பகுதிக்குள் விரட்டினர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும் மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் 2 யானைகளும் நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன. அங்கு கோபிநாத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்தன.
இதனை அறிந்த விவசாயிகள் பட்டாசு, வெடி வெடித்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
யானைகள் அட்டகா சத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா வி.ஏ.ஓ. தனசேகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
- 2 குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப் பல்லி பகுதியில் 2 குட்டிகள் உடன் வந்த 5 யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது.
இது குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உமராபாத் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
- பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, சில சமயங்களில் வீடுகளில் வைத்துள்ள உணவுகளையும் சேதப்படுத்தி செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை புகுந்தது.
சிறிது நேரம் அந்த யானை அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முயன்றது.
ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடையே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை யானை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். வீட்டிற்கு வெளியே யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சத்தம் போட்டனர்.
இருந்த போதிலும் யானை செல்லாமல் அங்கேயே சுற்றியது. இதுகுறித்து மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர்.
இதற்கிடையே யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.
இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
- பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி மற்றும் கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் போதுமான அளவில் உணவு, குடிநீர் கிடைக்காத நிலையில் யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் 2 காட்டு யானைகள் திருமூர்த்திமலையையடுத்த பொன்னாலம்மன் சோலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியதுடன், ஏராளமான தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றன.
விளைநிலங்களுக்குள் புகுந்து உணவு தேடும் யானைகள் அதன் சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.இதனால் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






