என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மம்தாபானர்ஜி"
- ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
- காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.
பகரம்பூர்:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி-சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரசை மம்தாபானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். முர்ஷிதா பாத் மாவட்டத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் அவர் தொலைபேசியில் தொண்டர்களிடம் கூறியதாவது:
ராகுல்காந்தியில் கருத்தால் பாராளுமன்றத்தை முடக்கி அவரை ஹீரோவாகும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுகிறது. தனது சொந்த நலனுக்காக பா.ஜனதா அப்படி செய்கிறது. ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள காவி முகாம் முன் ஒரு மறைமுகமான புரிதலுடன் அந்த கட்சி இருக்கிறது.
காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியதாக திரினாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது சொந்த ரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் மம்தா உரையாற்றியபோது கூறியதாவது:-
தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை.
மேற்ககு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் எனது ரத்தத்தை கூட சிந்துவேன் ஆனால் மாநிலத்தை பிரிக்கவிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்