search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா பொதுக்கூட்டம்"

    பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்கள் ஒன்றுபட்டுள்ள நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.#Mamata #AntiBJPRally #SoniaGandhi
    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்டனர். 

    மாநாட்டில் பேசிய தலைவர்கள், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கினார்கள்.

    மோடி ஆட்சியில், மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்து விட்டது. நாடு முன்னேற்றம் காணவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. வேலை வாய்ப்பை பெருக்கவில்லை. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.



    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பிரித்தாளும் மோடி அரசை நீக்குவதற்காக பலதரப்பட்ட தலைவர்களின் ஒன்றுபட்ட முயற்சியாகும். வரும் பாராளுமன்றத் தேர்தலில்  ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்க வேண்டும். 

    நாட்டில் உள்ள விவசாயிகள் மீதும் எல்லையில் உள்ள வீரர்கள் மீதும் ஒருவித நெருக்கடி நிலவுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மீனவர்கள் பேரிழப்பை சந்தித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #SoniaGandhi
    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை என்று தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். #tamilisai #pmcandidate

    அவனியாபுரம்:

    மதுரையில் வருகிற 27-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் மதுரை மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    பொதுக்கூட்ட பந்தலுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தி.மு.க.வினர்தான் ஜாமீன் கொடுத்து இருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் சதி இருப்பது தெரிகிறது.

    மதுரையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இதில் 10 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிப்ரவரி 10, 19 தேதிகளிலும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இது மக்களுக்கு எதிரான கூட்டணி ஆகும். அந்த மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பிரதமராக தகுதி உடையவர்கள் என மம்தா கூறுகிறார்.பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை.

    ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிய மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதை ஏன் கூறவில்லை?. மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் வங்க மொழியில் பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி.


    பெரியாரை பற்றி பேசும் அவர் வங்கத்தில் விவேகானந்தரை பற்றி பேசி உள்ளார். இதுவும் பிரதமருக்கு கிடைத்த வெற்றிதான்.

    மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால் தான் மதுரையில் நேற்று ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்கள் 18 மாதங்களில் முடிவடையும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். மத்திய -மாநில அரசுகள் இணக்கமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்கின்றன.

    தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டதா? என்று கேட்கிறார்கள். இன்றுதான் பந்தக்கால் நாட்டி இருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மற்ற கட்சிகளை பார்த்து இதுபோன்று கேள்விகளை கேட்பதில்லை. நாங்கள் வளர்ந்து வருவதால்தான் எங்களை பார்த்து கேட்கிறார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #tamilisai #pmcandidate #mamata #mkstalin

    பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்டுள்ள எதிர்க்கட்சிகளை நிலையற்ற, ஊழல்வாதிகள் கூட்டணி என்று குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் தங்களிடம் ஜனசக்தியும் உள்ளதாக குறிப்பிட்டார். #Mahagathbandhan #allianceofcorruption #Modi
    புதுடெல்லி:

    கோவாவில் உள்ள 5 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடாக பா.ஜ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பேசினார்.

    நவீன கோவாவை வடிவமைக்கும் சிற்பியும் எனது நண்பருமான கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் விரைவில் பூரண நலமடையை பிரார்த்தித்து கொள்கிறேன். இந்த நிலையிலும் அவர் பணியாற்றி வருவது நமக்கெல்லாம் ஊக்கசக்தியாக உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் இப்போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வில்லனாக சித்தரித்து பேசி வருகின்றனர். முன்னர் வாக்குச்சீட்டு தேர்தல் முறையை எதிர்த்தவர்கள் இப்போது தங்களது நிறத்தை மாற்றிகொண்டு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூற தொடங்கியுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஊழல், எதிர்மறை ஆகிய சக்திகளின் நிலையற்ற கூட்டணியாகும். எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் நம்மிடம் ஜனசக்தியும் உள்ளது என மோடி குறிப்பிட்டார். #Mahagathbandhan #allianceofcorruption #Modi
    கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவரும் எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தை கேலி செய்த பா.ஜ.க. இந்தியாவை அழிக்க கோமாளிகளும் பொய்யர்களும் திரண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. #MamataBanerjee #Megarally #BJPleaders
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.



    அவர்களின் பேச்சு வெவ்வேறு தலைப்புகளில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க. தரப்பில் இருந்து எதிர்ப்பு கணைகளும் பாயத் தொடங்கியுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தை கேலி செய்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் முகுல் ராய், ‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்காளம் மாநிலம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.

    மறுபடியும் இந்தியாவை அழிக்க பல்வேறு கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களான கலைஞர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும்  மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல்வாதி கும்பலை எதிர்த்தும் தேசவிரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்த நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி பாபுல் சுப்ரியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்வாதிகள் அனைவரும் மம்தாவுடன் ஒரே மேடையில் இணைந்துள்ளனர். இவர்களை தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டு கூற வேண்டியதில்லை. நீங்களே அந்த ஊழல் கறைபடிந்த முகங்களின் எண்ணிக்கையை பார்த்துக் கணக்கிட்டுக்கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #Megarally #BJPleaders
    ×