search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர்"

      புதுக்கோட்டை:

      மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

      அமைச்சர்கள் எஸ்.ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னர் குடும்பத்தினர் மற்றும் நூற்றாண்டு விழாக்குழுவினர், புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைத்திட அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்அ வர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

      மரணம் அடைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
      ராமநாதபுரம்

      ராமநாதபுரம் சேதுபதி மன்னா் பரம்பரை வாரிசான குமரன் சேதுபதி, இளைய மன்னா் என அழைக்கப்பட்டு வந்தாா். பல மாதங்களாக உடல் நலப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் நேற்று காலையில் வீட்டிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாா்.

      அவருக்கு மனைவிலக்குமி குமரன் சேதுபதி, மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திரசேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியாா் உள்ளனா்.குமரன் சேதுபதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

      குமரன் சேதுபதி, ராமேசுவரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

      அவரது உடல் அரண்மனை வளாகம் ராமலிங்க விலாசத்தில் உள்ள தா்பாா் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

      சகோதரரின் உடலுக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியாா், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

      அமைச்சர் ராஜகண்ணப்பன்,  ராமநா தபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கா்லால் குமாவத், கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன், அரண்மனை வகையறாவைச் சோ்ந்தவரும், தி.மு.க.மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, பா.ஜனதா பிரமுகா் சுப.நாகராஜன்.

       மதுரை 4-ம் தமிழ்ச்சங்க செயலா் மாரியப்பமுரளி, முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆா்.ராமசாமி, முதுகுளத்தூா் முருகன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்தின் மகன் பிரதீஷ், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி திருமாறன், ராமநாதபுரம் நகரசபை தலைவா் காா்மேகம் உள்பட பிரமுகர்கள், பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். 

      இன்று (புதன்கிழமை)மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள ராமலிங்க விலாசத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 
      ×