search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்தொகை கணக்கெடுப்பு"

    • பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
    • மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    பா.ம.க. சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பது தொடர்பாக கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார். இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வக்கீல் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று சாதிவாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் சமூக நீதியை காப்பாற்ற சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார்கள்.

    பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்களும், வல்லுநர்களும் தங்களது கருத்துக்களை முழுவதுமாக எடுத்துரைத்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று மாலை வரை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

    • இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
    • பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.

    இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    ×