என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்"
- எலிஸ் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட அலிசா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் வீரர்கனைகள் முதல் இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இவரது விக்கெட்டை முதலிலேயே வீழ்த்தியதால் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் வராது என நினைத்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்டுடன் எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினர். குறிப்பாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அதிரயாக விளையாடி சதம் விளாசினார். அவர் 93 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்து பெர்ரி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் 77 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக விளையாடி அரை சதம் (63) அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 49.5 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் உள்ளனர்.
- போட்டி நடைபெறும் நவிமும்பையில் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
- ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது. அடுத்து தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிடம் வரிசையாக தோல்வி கண்டு தடுமாறியது. அதன் பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியை உறுதி செய்தது. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 7 புள்ளிகள் எடுத்த இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடம் பெற்றது.
இந்திய அணியில் பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (ஒருசதம், ஒரு அரைசதம் உள்பட 365 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஓரளவு பங்களிப்பை அளிக்கின்றனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேட்டிங்கில் இருந்து கணிசமான ரன் வந்தால் மேலும் வலுப்பெறும். ஒரு சதம் உள்பட 308 ரன்கள் சேர்த்த தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியது பெருத்த பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷபாலி வர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா (15 விக்கெட்), ஸ்ரீ சரனி (11), கிரந்தி கவுட், சினே ராணா கைகொடுக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் சுற்றில் 330 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் ஒரு சேர ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வேட்கையுடன் ஆயத்தமாகும் இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வலம் வருகிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் (இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 13 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 வெற்றியை குவித்து வீறுநடை போடுகிறது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. பேட்டிங்கில் கேப்டன் அலிசா ஹீலி (2 சதம் உள்பட 294 ரன்), ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, போபி லிட்ச் பீல்டும், பந்து வீச்சில் அலனா கிங் (13), சோபி மொலினிக்சும் நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஆல்-ரவுண்டர்கள் அனபெல் சுதர்லாண்ட் (114 ரன், 15 விக்கெட்), ஆஷ்லி கார்ட்னெர் (2 சதம் உள்பட 265 ரன், 7 விக்கெட்) அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். தசைபிடிப்பால் கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் அலிசா ஹீலி உடல் தகுதியை எட்டி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும்.
ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் வரிந்து கட்டும். மொத்தத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் இந்திய அணி தக்க பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரேணுகா சிங் அல்லது ஷபாலி வர்மா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி அல்லது ராதா யாதவ்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடர்ல் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த மோதலில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் வீச தாமதமானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த 15-வது லீக்கில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியனான நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்தது. உலகக் கோப்பையில் இலங்கையின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் சமாரி அட்டப்பட்டு (53 ரன்), நிலக்ஷிகா சில்வா (55 ரன், 28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.
ஆனால் இலங்கையின் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா- இலங்கை இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 16-வது லீக்கில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் (பிற்பகல் 3 மணி) மோதுகின்றன.
- இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது. முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 252 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவை 81 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி (19.4 ஓவர்) நல்ல நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு தனது பிடியை நழுவவிட்டது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
இந்திய அணியில் பேட்டிங்கில் பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இன்னும் சோபிக்கவில்லை. அவர்கள் போதிய ரன் சேர்த்தால் சவாலான ஸ்கோரை எட்டலாம். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, சினே ராணா, கிரந்தி கவுட் சிறப்பாக செயல்படுகிறார்கள். முதல் 3 ஆட்டங்களில் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை துரிதமாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. அந்த பலவீனத்தை இந்தியா சரி செய்தாக வேண்டும். அத்துடன் பீல்டிங்கிலும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அடுத்து நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது.
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. பேட்டிங்கில் பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், கேப்டன் அலிசா ஹீலி, எலிஸ் பெர்ரியும், பந்து வீச்சில் அனபெல் சுதர்லாண்ட், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்டும் மிரட்டுகிறார்கள்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் உள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை பதம் பார்த்த இந்திய அணியினர் அந்த நம்பிக்கையுடன் அவர்களை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார்கள். ஆனால் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் சாதிக்க முடியும். இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.
இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், சினே ராணா, கிரந்தி கவுட், ஸ்ரீ சரனி.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்), போபி லிட்ச்பீல்டு, எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம் அல்லது சோபி மொலினிக்ஸ், கிம் கார்த், அலனா கிங், மேகன் ஸ்கட்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
- மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாகிறது. மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
- 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.
முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
- 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.
World cup semi final match jersey no "7" runout tough to forget.
— Vishnu Dhoni (@vishnukumar2017) February 24, 2023
7 - ? - ??#AUSvIND #INDWvsAUSW #WorldCup #Dhoni #HarmanpreetKaur #MSDhoni
Ms Dhoni ?& Harmanpreet Kaur? ? pic.twitter.com/JPWGqAgDKh
டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
- இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது.
- அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கேப்டவுனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அந்த அணி ஏற்கனவே 2010, 2012, 2014, 2018, 2020-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.8.27 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.14.48 லட்சமும் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது. அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.






