என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் படுகொலை"
- தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
- நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (வயது 31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் இருவரையும் ராமன் திருப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்.
படுகொலை
இந்த நிலையில் கூலி வேலை செய்து, தனியாக வசித்து வந்த சசிகலா, நேற்று காலை காரிப்பட்டி அருகே ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல் காட்டில் மது பாட்டிலால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்கு ரத்தக்கறையுடன் உடைந்த மதுபாட்டில் உள்ளிட்ட தடயங்களை கைப்பற்றி, கைரேகைகளை சேகரித்து ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் சென்று தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திடுக்கிடும் தகவல்
விசாரணையில் திடுக்கி டும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
சசிகலாவின் கணவர் ராமன் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ேவலை செய்யும் இடத்தில் பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாகினர்.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடை வில் தகாத தொடர்பு உருவானதாக கூறப்படு கிறது. இதையடுத்து இருவ ருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கொலை நடந்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
பெயிண்டரிடம் அதிரடி விசாரணை
அதன்பேரில் காரிப்பட்டி போலீசார், ெகாலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பெயிண்டர் பிரபுவை பிடித்து போலீஸ் நிலை யத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் பதிவான அழைப்பு கள், உரையாடல்கள் என்ன என்பது பற்றி கண்டறியும் நடவடிக்கையில் சைபர்கி ரைம் போலீசார் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரே கையுடன் ஒப்பிடும் நடவ டிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இளம்பெண் கொலையில் வேறு யாருக்கா வது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- மனைவி மாற்றும் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
- போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், தனது கணவர், சமூக வலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்தித்து கொள்வார்கள். அப்போது குழுவில் உள்ள ஒருவரின் மனைவியுடன் இன்னொருவர் உறவு கொள்வார்கள். அவர்கள் தங்கள் மனைவியரை மாற்றி செக்ஸ் உறவு வைத்து கொள்கிறார்கள்.
இந்த குழுவினர் சந்தித்து கொள்ளும்போது என்னையும் கணவர் அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்களுடன் என்னையும் உறவு கொள்ளும்படி வற்புறுத்துகிறார். இது எனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய பின்னரும் என்னை கட்டாயப்படுத்துகிறார். இதனால் நான் சிலருடன் கட்டாய உறவில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே எனக்கு தொல்லை தரும் இந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கோட்டயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கேரளாவில் சிலர் இதுபோன்ற குழுக்களை தொடங்கி செக்ஸ் உறவில் ரகசியமாக ஈடுபட்டு வரும் தகவல்கள் கிடைத்தன. அந்த குழுக்களை சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டறிந்தனர்.
மேலும் இக்குழுவை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அப்போது இது கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த குழு பற்றியும், இதில் இணைந்தவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மனைவி மாற்றும் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரித்தனர்.
இதற்கிடையே அந்த பெண்ணின் உறவினர்களும் அங்கே வந்தனர். அவர்கள், தங்கள் பெண்ணை கொலை செய்தது, அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கூறினர்.
போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது கணவர், வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர்தான், மனைவியை கொலை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
- இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது55). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் இறந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் இன்றுகாலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியம்மாளின் சொத்தை தனது 2-வது அக்காவின் பெயரில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை ஏற்பட்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்