search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • மகேஷ் வர்மாவும், டாக்டரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர்.
    • மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம் மாங்காபேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண் டாக்டர். இவர் சிக்பல்லாபூரிலுள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டராக வேலை செய்து வந்தார். இவர் மருத்துவக் கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    இதேபோல் ஏட்டுரை சேர்ந்த மகேஷ் வர்மா என்பவரும் அதே பஸ்சில் தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது மகேஷ் வர்மாவுக்கும், டாக்டருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் மகேஷ் வர்மா டாக்டரை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என நிராகரித்தார்.

    இதையடுத்து மேற்படிப்பிற்காக டாக்டர் சிப்பல்லூரிலேயே தங்கி இருந்தார். அங்கு சென்ற மகேஷ் வர்மா உன்னுடைய போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளேன் என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என பெண் டாக்டரை மிரட்டியுள்ளார்.

    மேலும் தனது உடலில் டாக்டர் பெயரை பச்சை குத்திக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன டாக்டர் மகேஷ் வர்மாவிடம் செல்போனில் உள்ள படங்களை அழித்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தனது ஆசைக்கு இணங்கினால் போட்டோக்களை அழித்து விடுவதாக மகேஷ் வர்மா தெரிவித்தார். இதனால் மகேஸ் வர்மாவின் ஆசைக்கு இணங்க டாக்டர் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து பெண் டாக்டரை பெங்களூரு அழைத்துச் சென்று அங்குள்ள லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பெண் டாக்டரை இந்துபூரில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். அப்போது மகேஷ் வர்மாவின் செல்போனில் உள்ள போட்டோக்களை அழிக்க வேண்டும் என பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேஷ் வர்மா தலையணையால் டாக்டரின் முகத்தில் அழுத்தினார். இதில் மூச்சுத்திணறி டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகேஷ் வர்மா அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் வர்மாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கடப்பா ரெயில் நிலையத்திலிருந்து ரெயிலில் தப்பி செல்ல முயன்ற மகேஷ் வர்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×