search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாவு"

    • சரளம்மாள் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்
    • மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை திங்களூர் கிராமத்தில் உள்ள காடுபசுவமாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 68). இவரது மனைவி சரளம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சரளம்மாள் தனக்கு இடது தோள்பட்டையில் வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் சரளம்மாள் நேற்று அதிகாலை தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சரளம்மாள் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி பெண் உயிரிழந்தார். கர்நாடகாவில் இருந்து ஒகேனேக்கல் வந்தபோது விபத்து
    • கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகேனேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஒகே னேக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அம்போது தேன்கனி கோட்டை மர கட்டா கிரா மத்தின் அருகே ஒர் வளைவில் திரும்பும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது நிலை தடுமாறிய கார் மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ஒரு பெண் சம்ப இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக் கோட்டை போலிசார் விரைந்து வந்து பெண் உடலை கைபற்றி தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவம னையில் சிகிச்சை அளித்து மேற்கி ச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் இறந்தவர் வைசாலி (54) காயம் அடைந்தவர்கள் இஷான் (32) தினேஷ் (27) பவினா (27) ஹேமந் குமார்( 67) ஆகிய 4 பேர் என தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • துணி துவைக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கபூர், டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 45). இவர் வீட்டின் எதிரே உள்ள இரும்பேடு பெரிய ஏரியில் துணி துவைக்க சென்றார். அப்போது ஏரியில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். பின்னர் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ஷர்மிளாவை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஷர்மிளாவின் உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹைருன்னிசா வெளியில் சென்று விட்டு வரும்போது கீழே விழுந்து விட்டார்.
    • இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் ஹைருன்னிசா (57). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஹைருன்னிசா கடந்த மாதம் வெளியில் சென்று விட்டு வரும்போது அப்பகு தியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் கீழே விழுந்து விட்டார்.

    இதில் அவரது கண் புருவத்தில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது. பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    அதன்பின் ஹைருன்னிசா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மீண்டும் ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹைருன்னிசா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அலாவூதீன் (38) அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.
    • அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு கொட்டச்சேடு, அயோத்தியாப்பட்டணம் வழியாக கீழே இறங்கினர். அப்போது சாலைப்புதூர் முனியப்பன் கோவில் அருகே வந்தபோது வண்டியின் பின்னால் இருந்த நீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நீலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகுநாதன். இவரது மனைவி நீலா (வயது 53). இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஏற்காடு சென்றனர்.

    • கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகி ரியை அடுத்த வாழை த்தோட்டம் காரவலசையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 44). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி சித்ரா (42). இவர் சம்பவ த்தன்று காரவலசில் உள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்திற்கு கூலிவே லைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சித்ரா வேலை பார்த்து கொண்டிருக்கும் போது கரும்புத்தோட்டத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.

    இதனையடுத்து சித்ராவுடன் வேலை செய்துகொண்டிருந்த அவரது சகோதரி ராசாத்தி என்பவர் சித்ராவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழை த்து சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து சித்ராவின் கணவர் மாணிக்கம் சிவகிரி போலீ சாரிடம் புகார் அளித்து ள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து பெண் இறந்தார்.
    • இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (64). இவர் அங்குள்ள வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.
    • கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த குமார். இவரது மனைவி பூஞ்சோலை(60) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், மேலும் பூஞ்சோலை ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீட்டின் அருகே வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கால்நடைகளுக்கு தேவையான புல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல் செடிகளில் பதுங்கி இருந்த விஷ பாம்பு ஒன்று பூஞ்சோலை காலில் கடித்துள்ளது. அங்கு மயங்கிய நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூஞ்சோலையின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.

    அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    களம்பூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 46) இவர்க ளுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லதா திருமலை கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பு சரியாக எரியவில்லை என எண்ணெய் ஊற்றியபோது லதா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை சிகிச் சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குக்கர் வெடித்த சத்தம் கேட்டு ஓடியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று கியாஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதனால் அலறி அடித்துக் கொண்டு செல்வி வெளியே ஓடினார். இதில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்வி இறந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
    • டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×