search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl died."

    • மணல் மேலே சரிந்து விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த மோசவாடியைச் சேர்ந்தவர் வடிவேல் (43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (37). இவர்களுக்கு சாருலதா (18). சர்மி (வயது 9) என 2 மகள்கள் உள்ளனர்.

    சர்மி, கரிப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி யில், மற்றொருவரின் வீடு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. அந்த வீட்டுக்கான செப்டிக்டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சிறுமி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் பாராதவிதமாக மண் சரிந்ததில், செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத் தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அதற் குள்ளாக சர்மி மீது மண் சரிந்து உயிருக்கு போராடிக் கொண் டிருந்தார். அவரை மீட்பதற்காக பொதுமக்கள் முயன்றனர். ஆனால் சிறுமி மண்ணுக்குள் முழுமையாக புதைந்துவிட்டார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப் புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து, சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தி சர்மி இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபுஜா குமாரி குச்சியை எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
    • இதில் குச்சி உடைந்து தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பீகார் மாநிலம், ஹிசுவா பகுதியை சேர்ந்தவர் அனூப் மாஞ்சி (43). இவர் ஈரோடு மாவட்டம் குப்பக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அனூப்மாஞ்சி சம்பவத்தன்று பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது மகள் சபுஜா குமாரி (12) விளையாடி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது சபுஜா குமாரி கையில் வைத்திருந்த மரக் குச்சியை அங்கு இயங்கி கொண்டிருந்த எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.

    இதில் குச்சி உடைந்து சபுஜா குமாரியின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சபுஜா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரியாபட்டி அருகே வெந்நீர் கொட்டி 3 வயது சிறுமி இறந்தாள்.
    • இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் இருந்தாள். சம்பவத்தன்று ஆனந்தவேலு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி குழந்தையை வீட்டின் அறையில் விட்டு விட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கொதிக்கும் தண்ணீர் இருந்த பாத்திரம் அருகே சிறுமி சென்றாள். அப்போது கொதிக்கும் தண்ணீர் சிறுமி மீது கொட்டியது. வலியால் கதறியழுத மகளை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தனுஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தாள். இது தொடர்பாக ஆனந்தவேலு கொடுத்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் .
    • நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) இவருக்கு செல்வி (28) என்ற மகள் உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 வருடங்களாக தாய் பார்வதியுடன் வசித்து வருவதாகவும் செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாண்டிச்சேரியில் உள்ள அரசு பொது ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இருந்தார். இது குறித்து தாய் பார்வதி கொடுத்த புகாரின் ேபரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறி விழுந்து 2 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆனையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவரது மகள் ஜனனி (2). இவளுக்கு தலையில் நீர்க்கட்டி இருந்தது. இதற்காக சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று ஜனனி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சிறுமியை குடும்பத்தினர் மீட்டு உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×