search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவறி விழுந்து 2 வயது சிறுமி சாவு
    X

    தவறி விழுந்து 2 வயது சிறுமி சாவு

    • தவறி விழுந்து 2 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆனையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவரது மகள் ஜனனி (2). இவளுக்கு தலையில் நீர்க்கட்டி இருந்தது. இதற்காக சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று ஜனனி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சிறுமியை குடும்பத்தினர் மீட்டு உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×