search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளம் பெண் சாவு
    X

    திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளம் பெண் சாவு

    • திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது.
    • வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 36). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அக்கம்பக்கம் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக செல்வியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×