search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டை உடைத்து"

    • எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு, நைனாபட்டி ரோட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவர் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    நேற்று முன்தினம் வழக்கம்போல் கவிதா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

    அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையடித்த பொருள்களின் ஒரு பகுதியை கடை அருகிலேயே போட்டு விட்டு சம்பந்தப்பட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கண்காணிப்பு கேமரா

    இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நள்ளிரவு நேரத்தில் கவிதாவின் கடைக்குள் நுழையும் மர்ம நபர் 3 முறை பெரிய அளவிலான பைகளில், அங்கிருந்த பழம் மற்றும் பொருட்களை அள்ளிச் செல்வது பதிவாகி உள்ளது.

    இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பழக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் கொள்ளை

    மேலும் அண்மையில் கவிதாவின் பழக்கடை அருகே உள்ள சேகர் (48) என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் தொடர்ந்து பழக்கடைகளை குறிவைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழியர் குடியிருப்பு

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மோகன் நகரில், இரும்பலைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு இரும்பாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், இந்த வீடுகளில் வசித்து வந்த ஊழியர்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென் றுள்ளது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வீட்டிலிருந்து எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அடுத்தடுத்து 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இரும்பாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.
    • 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

    இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அறைக்குள் புகுந்தனர்.

    அங்கிருந்து 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் பணிக்கு வந்த பேராசிரியர்கள் கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது 6 கம்ப்யூட்டர்களை மர்ம நபர்கள் திருடி சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.

    இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    நேற்று தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.

    கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்ப டாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது:-

    எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    மின் மோட்டாரின் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடு போகிறது.தற்போது கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளைய டிக்கபட்டு உள்ளது.

    தொடர் திருட்டு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்றனர்
    • போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் (டீச்சர்ஸ் காலனி)பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவரது மனைவி சர்மிளா. விக்னேஷ் வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்று விட்டார். வீட்டில் ஷர்மிளா மட்டும் தனியாக இருந்தார். இவர்கள் வீட்டின் அருகே விக்னே ஷின் அப்பா ராஜேஷ் வீடு உள்ளது. இதனால் தனியாக இருந்த சர்மிளா தனது மாமா வீட்டிற்கு இரவு தூங்க சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை சர்மிளா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அவரின் மாமனாரிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து விசாரித்த னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் அந்தியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு காணப்பட்டது.

    • மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் மந்திர் என்ற கோவிலை அப்பகுதியில் கட்டி வழிபட்டு வந்தனர்.

    சுப்தேவ்(45) என்பவர் இந்தக் கோவிலின் பூசாரியாக உள்ளார். தினமும் அதிகாலை கோவிலைத் திறந்து பூஜைகள் செய்து இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    நேற்று இரவு 8 மணி அளவில் பூஜைகள் முடிந்து சுப்தேவ் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக சுத்தேவ் வந்தார். கோவில் நுழைவாயில் கதவை திறந்து கோவில் வளாகத்திற்குள் சென்றார்.

    அங்கு கருவறையில் உள்ள கதவை திறக்க சென்றபோது ஏற்கனவே கதவு கடப்பாறை கம்பியால் உடைத்து திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே பீரோல் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உண்டியலில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையும் திருட்டுப் போயிருந்தது.

    இது குறித்து சுப்தேவ் ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த ஜெயின் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஜெயின் கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கோவில் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைவதும் அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வதும் நகைகளை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜெர்ரி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இரும்பு உண்டியலை அவர்கள் திறக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிகாலை வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.
    • இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் நஞ்சப்பன் என்கிற குமார் (வயது 47)/ தி.மு.க., பிரமுகரான இவரின் வீடு அம்மாபாளையம் ஆலமரம் அருகே உள்ளது. இந்த புது வீட்டில் யாரும் குடியில்லை.

    குமார் அம்மாபாளையம் அரசு பள்ளி எதிரில் மளிகை கடை நடத்தி வருவதால் அதன் அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆலமரம் அருகே உள்ள வீடு ஒரு மாதமாக பூட்டி கிடக்கிறது. இந்த வீட்டில் நேற்று இரவில் மர்ம நபர்கள் மெயின் கேட் ஏறி குதித்து உள்ள சென்று உள் கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

    வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் திருட வந்த மர்ம நபர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாற்றத்தினை பொறுத்து கொள்ள முடியாத மர்ம நபர்கள் அருகில் கைவரிசை காட்டிஉள்ளனர்.

    அந்த வீட்டின் அருகே சதாசிவம் வயது (44) என்பரின் டீ கடை உள்ளது. டீ கடையினை நேற்று வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து இரவு பூட்டி விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.

    உள்ள சென்று பார்த்த போது மர்ம நபர்கள் இரவு கடையின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ள சென்று ரொக்க பணம் சுமார் ரூ. 25 ஆயிரம் திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த சிகரெட் மற்றும் பீடி பண்ட ல்களையும் திருடியுள்ளனர். திருடிய சிகரெட், பீடிகளை அருகே குப்பையில் வீசி சென்று விட்டனர்.

    இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சரவணன், பெருந்துறை ஏ.டி.எஸ்.பி., கவுதம் கோயல் ஆகியோர் நேரில் வந்து பார்வை யிட்டனர்.

    கை ரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது.

    இந்த நாய் அம்மா பாளையத்தில் இருந்து சென்னிமலை டவுன் வரை ஓடி வந்தது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    சென்னிமலை பகுதியில் தொடர்ந்து இதே போல் 3 இடங்களில் தொடர்ந்து பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சென்னிமலை நகர மக்களுக்கு பெரும் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் உள்ளது தோப்புகாடு. இங்கு சென்னிமலை அடுத்துள்ள உப்பிலிபாளையத்தினை சேர்ந்த பழனிசாமி என்பவர் உதயமலர் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

    100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உறுப்பினராக கொண்டு பழனிசாமி தலைவராகவும், வெள்ளோடு கனகபுரத்தினை சேர்ந்த வினோத் குமார் என்பவர் செயலாளராக இருந்து நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் வழக்கம் போல் வினோத்குமார் அலுவலக வேலை முடிந்து அலுவலகத்தினை பூட்டு விட்டு சென்று விட்டார். சம்பவத்தன்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ. 12 ஆயிரம் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கம்யூட்டர் பிரிண்டர் திருட்டு போனதும் தெரிய வந்தது.

    இது குறித்து தலைவர் பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் வழக்கு பதிவு செய்து திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    சென்னிமலை டவுன் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு நடந்த அடுத்த நாளே மீண்டும் பூட்டை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் சென்னிமலை பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை நடந்துள்ளது
    • குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவில் வசித்து வருபவர் முகமது ஹனிபா (வயது66). இவர் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை ப ார்த்து அதிர்ச்சியானர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.40 திருடுபோயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் ேபரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை அருகே வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை திருட்டு.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (58). விவசாயி. இவரது மனைவி விஜய குமாரி. இந்த கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு உள்ளது. விஜயகுமாரியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டை பராமரித்து வருகிறார்.

    கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 25 ஆண்டு களாக புதுச்சேரியில் குடியிருந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். அப்போது அவர்கள் தோட்டத்தின் வீட்டில் தங்குவது வழக்கம்.

    இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்னிமலையை சேர்ந்த சம்பந்த குருக்கள் அங்கு வந்தார். அப்போது சந்தானகிருஷ்ணனின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து வீட்டை பராமரித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோ, உள் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    அப்போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் எடையுள்ள 3 மூக்குத்திகள் மற்றும் 10 ராசி கற்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னி மலை போலீசில் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருட்டு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×