டீ கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

அதிகாலை வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டீ கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
Published on

சென்னிமலை:

சென்னிமலை பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் நஞ்சப்பன் என்கிற குமார் (வயது 47)/ தி.மு.க., பிரமுகரான இவரின் வீடு அம்மாபாளையம் ஆலமரம் அருகே உள்ளது. இந்த புது வீட்டில் யாரும் குடியில்லை.

குமார் அம்மாபாளையம் அரசு பள்ளி எதிரில் மளிகை கடை நடத்தி வருவதால் அதன் அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆலமரம் அருகே உள்ள வீடு ஒரு மாதமாக பூட்டி கிடக்கிறது. இந்த வீட்டில் நேற்று இரவில் மர்ம நபர்கள் மெயின் கேட் ஏறி குதித்து உள்ள சென்று உள் கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் திருட வந்த மர்ம நபர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாற்றத்தினை பொறுத்து கொள்ள முடியாத மர்ம நபர்கள் அருகில் கைவரிசை காட்டிஉள்ளனர்.

அந்த வீட்டின் அருகே சதாசிவம் வயது (44) என்பரின் டீ கடை உள்ளது. டீ கடையினை நேற்று வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து இரவு பூட்டி விட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். இன்று அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்த போது கடையின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுள்ளது.

உள்ள சென்று பார்த்த போது மர்ம நபர்கள் இரவு கடையின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ள சென்று ரொக்க பணம் சுமார் ரூ. 25 ஆயிரம் திருடி சென்றுள்ளனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த சிகரெட் மற்றும் பீடி பண்ட ல்களையும் திருடியுள்ளனர். திருடிய சிகரெட், பீடிகளை அருகே குப்பையில் வீசி சென்று விட்டனர்.

இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சரவணன், பெருந்துறை ஏ.டி.எஸ்.பி., கவுதம் கோயல் ஆகியோர் நேரில் வந்து பார்வை யிட்டனர்.

கை ரேகை நிபுணர்கள் வந்து கைரேகை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது.

இந்த நாய் அம்மா பாளையத்தில் இருந்து சென்னிமலை டவுன் வரை ஓடி வந்தது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

சென்னிமலை பகுதியில் தொடர்ந்து இதே போல் 3 இடங்களில் தொடர்ந்து பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சென்னிமலை நகர மக்களுக்கு பெரும் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com