search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில்7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில்7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

    • இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழியர் குடியிருப்பு

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மோகன் நகரில், இரும்பலைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு இரும்பாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், இந்த வீடுகளில் வசித்து வந்த ஊழியர்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென் றுள்ளது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வீட்டிலிருந்து எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அடுத்தடுத்து 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இரும்பாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×