search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BROKE THE LOCK"

    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஒரு மில்லில் வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாதே ஸ்வரன் தனது மனைவி யுடன் கோபிசெட்டி பாளை யத்திற்கு ஒரு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போத பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையும் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மாதேஸ்வ ரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
    • பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவர் ஐ.ஏ.எஸ் முடித்து தமிழக அரசு உயர்பதவியில் பணியாற்றியவர். தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் சந்திரசூடன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சந்திரசூடன் சென்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார்.

    இதனால் விடுமுறையில் மட்டும் தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த வீட்டில் 2 பணியாளர்கள் தினசரி வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி பணியாளர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    உடனே இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு பணியாளர் ஈஸ்வரன் (29) தகவல் தெரிவித்தார். அவர் பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் கூறினார். இதனை தொடர்ந்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் முக்கிய தடயங்களை பதிவு செய்து சென்றனர்.

    கம்பம் நகரில் 24 மணிநேர அனுமதியற்ற பார்கள் தடையின்றி செயல்படுகிறது. இதனால் போதை கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் போதையில் வரும் நபர்கள் சாலையில் நிறுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்து செல்கி ன்றனர். இதுதவிர நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபோன்ற குற்றங்களை தடுக்க வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு இடங்க ளில் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவைகள் உடைக்கப்பட்டும், பல இடங்களில் செயல்ப டாத நிலையிலும் உள்ளது. இரவு நேர ரோந்து போலீ சார் பணியில் இல்லாததால் போதை கும்பல் மற்றும் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

    எனவே மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி செயல்படும் பார்கள் மற்றும் கொள்ளை யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    • வீட்டின் பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகள் திருட்டு போனது.
    • பாடாலூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்று விட்டு, பின்னர் மதியம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 2 ஏ.டி.எம். கார்டுகள், 500 ரூபாய், வெள்ளி சங்கிலி ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்."

    • வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை நடந்துள்ளது
    • குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவில் வசித்து வருபவர் முகமது ஹனிபா (வயது66). இவர் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை ப ார்த்து அதிர்ச்சியானர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.40 திருடுபோயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் ேபரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×