என் மலர்
நீங்கள் தேடியது "2 pounds of jewellery"
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 2 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (45). இவர் ஒரு மில்லில் வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாதே ஸ்வரன் தனது மனைவி யுடன் கோபிசெட்டி பாளை யத்திற்கு ஒரு விசேஷத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போத பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகையும் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மாதேஸ்வ ரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.






