search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை திட்டம்"

    • ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணி கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக வந்த இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், சிவகுமார், பரந்தாமன், ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் வந்திருந்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் அந்த குழுவினர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருந்துவ வசதிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பி னர்கள் பார்வையிட்டதோடு, பாம்பு கடி, நாய்கடி உள்ளிட்ட சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு குறித்து பார்வையிட்டார்கள்.

    நான்கு வழிச்சாலைப் பணிகள்

    மேலும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதயம் காப்போம் மருத்துவ பெட்டகங்களை ஆய்வு மேற்கொண்டதோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக பாளையங்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.

    குலவணிகர்புரத்தில் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியினையும், அவ்விடுதியில் பயோமெட்ரிக் முறையில் கதவு திறக்கப்படுவது குறித்தும் பார்வையிட்டு, போதுமான இடவசதி உள்ளதா? என்பதையும் பணிபுரியும் மகளிர்களிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து பாளை ஏ.ஆர். லைனில் உள்ள வணிகவரி இணை ஆணையர் அலுவ லகத்தினை பார்வையிட்டு, இணைய வழியாக ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சரக்கு போக்குவரத்து சரியான முறையில் செல்லும் நடைமுறை கள் குறித்து பார்வையிட்டனர்.

    சித்தா கல்லூரி

    மேலும், அரசினர் சித்தா கல்லூரி மாணவிகள் ஆதிதிராவிடர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவிகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், சுகாதார முறையில் கழிப்பிட வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பட்டி அரசு பள்ளியை ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் இருந்து பிரிந்துள்ள பாளை யங்கால்வாயில் பார்வையிட்ட போது அமலை செடிகள் அதிகளவில் அடர்ந்திருந்தது. அதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எந்திரங்களை பயன்படுத்தாமல் உள்ளனர். நாங்குநேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் வராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

    ரூ.652 கோடியில் 3-ம் கட்டப்பணி

    தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 6 மாத காலமாக அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில் அதில் தற்போது 2 கட்டப்பணி முடிந்து உள்ளது. ரூ.652 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.

    பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.


     


    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காமல் கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்/ இதனை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பாறை குழி மற்றும் வார்டு -32 தங்க மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். முடிக்கப்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக நிரப்பி சாலை அமைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் 15-வது வார்டு காளிகாம்பாள் தெருவில் பாதை நடுவே மின்கம்பம் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைத்து உள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும்போது சாலை நடுவே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    திருக்குறளை வாசித்து மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தமான குறை களை தெரிவித்து பேசினர்.

    கலைஞர் நினைவாக

    பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்பது, மாநகராட்சி அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு டாக்டர் கலைஞர் வணிக வளாகம் என பெயர் சூட்டுவது.

    ஓய்வெடுக்கும் அறை

    புதிய பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் ஏலம் போகாத 60 கடைகளை பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகளாக மாற்ற செலவினம், ரூ.447.75 கோடி மதிப்பிட்டில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டை யப்பன், சுதா மூர்த்தி, அனுராதா சங்கரப்பாண்டி யன், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், சந்திரசேகர், ரவீந்தர், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 9,078 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
    • ராமாபுரம், நெற்குன்றம் பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் ரூ.866.34 கோடி மதிப்பீட்டில் மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், நெற்குன்றம், பள்ளிக்கரணை பகுதிகள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மதனங்குப்பம், ஒரகடம், வெங்கடாபுரம், கள்ளிகுப்பம் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மணலி மண்டலத்திற்கு உட்பட்ட சி.பி.சி.எல். நகர், சின்னமாத்தூர் சாலை, திருவேங்கடம் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.60.89 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.

    இதன்மூலம் 7,182 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதேபோல சின்னசேக்காடு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.

    வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 9,078 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். ராமாபுரம், நெற்குன்றம் பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.

    ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதியில் நடந்து வரும் பணியின் மூலம் 10,900 வீட்டு கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

    பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ரூ.249 கோடியிலும், பள்ளிக்கரணையில் ரூ.92 கோடி செலவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 14 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.

    விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் 59 ஆயிரத்து 446 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதன்மூலம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 799 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    ×