search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 652 கோடியில் பாதாள சாக்கடை திட்ட 3-வது கட்டப்பணி தொடங்க உள்ளது-நெல்லையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் பேட்டி
    X

    பாளை வணிகவரித்துறை அலுவலகத்தில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

    ரூ. 652 கோடியில் பாதாள சாக்கடை திட்ட 3-வது கட்டப்பணி தொடங்க உள்ளது-நெல்லையில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் பேட்டி

    • ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணி கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக வந்த இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், சிவகுமார், பரந்தாமன், ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் வந்திருந்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் அந்த குழுவினர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருந்துவ வசதிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பி னர்கள் பார்வையிட்டதோடு, பாம்பு கடி, நாய்கடி உள்ளிட்ட சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு குறித்து பார்வையிட்டார்கள்.

    நான்கு வழிச்சாலைப் பணிகள்

    மேலும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதயம் காப்போம் மருத்துவ பெட்டகங்களை ஆய்வு மேற்கொண்டதோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக பாளையங்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.

    குலவணிகர்புரத்தில் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியினையும், அவ்விடுதியில் பயோமெட்ரிக் முறையில் கதவு திறக்கப்படுவது குறித்தும் பார்வையிட்டு, போதுமான இடவசதி உள்ளதா? என்பதையும் பணிபுரியும் மகளிர்களிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து பாளை ஏ.ஆர். லைனில் உள்ள வணிகவரி இணை ஆணையர் அலுவ லகத்தினை பார்வையிட்டு, இணைய வழியாக ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சரக்கு போக்குவரத்து சரியான முறையில் செல்லும் நடைமுறை கள் குறித்து பார்வையிட்டனர்.

    சித்தா கல்லூரி

    மேலும், அரசினர் சித்தா கல்லூரி மாணவிகள் ஆதிதிராவிடர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவிகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், சுகாதார முறையில் கழிப்பிட வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பட்டி அரசு பள்ளியை ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் இருந்து பிரிந்துள்ள பாளை யங்கால்வாயில் பார்வையிட்ட போது அமலை செடிகள் அதிகளவில் அடர்ந்திருந்தது. அதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எந்திரங்களை பயன்படுத்தாமல் உள்ளனர். நாங்குநேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் வராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

    ரூ.652 கோடியில் 3-ம் கட்டப்பணி

    தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 6 மாத காலமாக அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில் அதில் தற்போது 2 கட்டப்பணி முடிந்து உள்ளது. ரூ.652 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.



    Next Story
    ×