search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைமரம்"

    • சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன.

    கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.

    ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மென்மையானது என்பதால் தாய்ப்பாலுக்கு இணையான பானம் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்களும் உள்ளன. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி, நுங்கு ஆகியவை கிடைக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    'கள்' தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார். அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.

    இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயர் காலத்து புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கள் தடை காரணமாக தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்து விட்டது. 45 கோடி பனை மரங்கள் செங்கல் சூளைக்கும் சுண்ணாம்பு காலவாய்க்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு விட்டது.

    தென்னை மரத்தை 3 முதல் 4 ஆண்டுகளில் வளர்த்து விடலாம். ஆனால் பனை மரத்தை நினைத்த உடன் உருவாக்க முடியாது. பனை மரம் வளர 13 முதல் 14 ஆண்டுகள் ஆகும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலில் உள்ள லோரிக் ஆக்சிட் கள்ளில் அதிக அளவில் உள்ளன.

    கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பயன் அடைவார்கள். மேலும் 8 கோடி மக்களுக்கும் சத்தான இயற்கையான மென்பானம் கிடைக்கும். பனை மரத்தில் கள் இறக்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்காது. படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பன்னாட்டு விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டலாம்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினாலே தமிழகம் தலை நிமிரும். முதன்மை மாநிலமாக மாறும்.

    மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.

    கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்கினால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
    • பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 6-வது கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் கருத்தரங்கு கூடத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    கூடுதல் ஆணையர் சமரசம், வேலாம்பிகை நிதித்துறை சார்பு செயலர் ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் பொது மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் உதவி இயக்குநர் தண்ணன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய செயலாளர் மாதவன், வேலையளிப்போர் மற்றும் தொழிலாளர் தரப்பு வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கும் கண்கண்ணாடி உதவித் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக உயர்த்துவதற்கும். தமிழ்நாடு பனைமரத் தொழிவாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

    பனைமரம் வெட்டுவதை தடுக்க அரசாணை வெளியிட வேண்டும். என்றும். பனை ஏறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். நல வாரியத்தில் வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்து வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். முன்னதாக கிரின் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில தேசிய நலத்திட்டம் ஆகியவை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து மேற்கொள்ளும் "1 கோடி பனை விதை நடும் நெடும் பணி' திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும்.
    • தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது.

    மேல்மலையனூரில் வருடந்தோரும் மாசி மாதம் தேர்திருவிழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்கதர்கள் சாமி திரசனம் செய்வார்கள்.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நிரந்தரமாக கோவில் தேர் இருக்கும். ஆனால் மேல்மலையனூரில் மட்டும் வருடந்தோறும் ஒர் புதிய தேர் செய்யப்படுகிறது. இந்த தேர் 15 நாட்களில் பச்சசை பனைமரங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது.

    தேர் செய்வதற்கு பனைமரம் புளியாமரம் காட்டுவாமரம் போன்ற மரங்களை பயன்படுத்தி ஒர் புதிய அழகான தேர் உருவாக்கப்படுகிறது. மேல்மலையனூர் தேர் சக்கரம் தேவர்களாக பாவிக்கப்படுகிறது.

    • பனை மரத்தின் உச்சியில் இருந்து அந்த நபரை இறக்கும்போது நிலைதடுமாறி கீழே விழ வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் நினைத்தனர்.
    • மரத்தில் அமர்ந்தபடியும் மது குடித்து விட்டு அயர்ந்து தூங்கியது தெரியவந்தது. மயிரிழயைில் உயிர் தப்பிய அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்கோட்டாம்பட்டி கிராமத்தில் உள்ள பனைமரத்தில் இருந்து கொர்... கொர்... என்ற குறட்டை சத்தம் வந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் பனைமரத்தின் மேல் பகுதியை கூர்ந்து கவனித்தபோது அந்த மரத்தின் உச்சியில் அமர்ந்து ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பனைமர உச்சியில் இருந்த வாலிபரை எழுப்ப முயன்றனர். இருந்தபோதிலும் அவரிடம் இருந்து எந்தவித பதில் வரவில்லை. எனவே தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். பனை மரத்தின் மீது அமர்ந்திருப்பவரை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பனை மரத்தின் அடியில் கயிற்றுவலை அமைத்து மீட்பு பணிகளில் ஈடுபடலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பனை மரத்தின் உச்சியில் இருந்து அந்த நபரை இறக்கும்போது நிலைதடுமாறி கீழே விழ வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் நினைத்தனர். இதனை தொடர்ந்து பனை மரத்தின் உச்சியில் இருக்கும் நபரை கிரேன் மூலம் இறக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அதிநவீன கிரேன் ஒன்றை வரவழைத்தனர். இதன்வாயிலாக அந்த நபர் பனைமர உச்சியில் இருந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டார். அதன்பிறகு அவரை போலீசார் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் பனைமர உச்சிக்கு சென்று தூங்கியவர், ஆனைமலை செமணாம்பதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கிடைக்கும் பணத்தில் மதுபானம் அருந்தி வந்து உள்ளார். நேற்று லட்சுமணன் அளவுக்கு மீறிய போதையில் பனைமர உச்சிக்கு சென்றுள்ளார். மரத்தில் அமர்ந்தபடியும் மது குடித்து விட்டு அயர்ந்து தூங்கியது தெரியவந்தது. மயிரிழயைில் உயிர் தப்பிய அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
    • இந்த நிலையில் வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நக ராட்சிக்கு உட்பட்ட கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.

    இந்த குட்டையில் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டையின் கரை யோரத்தில் பனை மரங்கள் உள்ளது. இந்த குட்டையை யும், அருகாமையில் உள்ள சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் நடு பகுதியில் ரோடு செல்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டி ருந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டு, அங்கு தற்போது பொது மக்கள் நடந்து செல்ல நடைமேடை, நீர்த்தேக்க குட்டை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குட்டையில் இருந்து லாரிகளில் 250 லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் இங்கு கடந்த வாரம் சுமார் 30 ஆண்டுகள் பழ மையான இச்சி மர கிளை களை வெட்டி அகற்றி னார்கள். அதனை தொடர்ந்து, அரசு அனுமதி யின்றி கரையோரமாக நின்ற 15 ஆண்டுகள் பழமையான பனைமரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர்.

    மேலும் குட்டையின் கரையோரம் கட்டப்பட்டி ருந்த தானியகளத்தை இடித்து அகற்றினர். இத னால் சுற்று வட்டார மக்கள் தங்கள் தோட்டங்க ளில் விளையும் ராகி, சோளம், கம்பு, கடலை ஆகிய தானி யங்களை காய வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடுகாட்டை அகற்றும் முயற்சியில் நக ராட்சியினர் ஈடுபட்டு வரு வதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு செலவில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, அதன் பிறகு அந்த மரக்கன்று களை, பிடிங்கி அகற்றுவது தொடர் கதையாக உள்ளது. பனை மரங்களை பாது காக்கும் வகையில் அவற்றை வெட்ட கூடாது என தமிழக அரசு ஏற்க னவே உத்தரவிட்டு இருக்கி றது. மேலும் பல்வேறு இடங்களில் பனை மர விதைகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நட்டு ஊக்கவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வரு வாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர். இது பற்றி அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என குமுறலுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.
    • 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தநிலையில் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சுமார் 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.

    இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது இதில் ரமேஷ்,சரவணகுமார்,உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.மேலும் வீட்டினுள் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.இந்த சம்பவம் நடந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

    • இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடாசலம்.இவர் களப்பால் கிராமத்தில் உள்ள ஓ.என்.சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் தனது வீட்டிலிருந்து திருமக்கோட்டை சாலை வழியாக இன்று களப்பால் நோக்கி சென்றபோது மறவக்காடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த பனைமரம் ஒன்று திடீரென முறிந்து வெங்கடாசலம் மீது விழுந்தது.இதில் காயமடைந்த வெங்கடாஜலத்தை பொதுமக்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வெங்கடாசலம் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பனைமரம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    ×