search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த காற்றால் வீடுகள் மீது விழுந்த பனைமரம்
    X

    பனைமரம் விழுந்து சேதம் அடைந்து வீட்டை படத்தில் காணலாம்.

    பலத்த காற்றால் வீடுகள் மீது விழுந்த பனைமரம்

    • 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.
    • 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தநிலையில் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சுமார் 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.

    இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது இதில் ரமேஷ்,சரவணகுமார்,உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.மேலும் வீட்டினுள் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.இந்த சம்பவம் நடந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    Next Story
    ×