search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமன ஆணை"

    • வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
    • ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை-ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் (வயது 38).

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பரத்தை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார்.

    அதில் பேசிய சிவகங்கை மாவட்டம் டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த ரகுபதிராஜன் (48) என்பவர், வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறி உள்ளார்.

    இதை நம்பிய பசும்பொன் முத்துராமலிங்கம் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி முதல் இந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் ரூ.4 லட்சம் பணத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.

    அதனை ரகுபதி ராஜன் பெற்றுக்கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதில் ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். 

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
    • இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

     திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2404 வேலை நாடுனர்களும், 96 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 160 வேலை நாடுனர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
    • பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் பேசுகையில், மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டொன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு ஆண்டு தோறும் 80 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று பேசினார்.

    விழாவின் போது கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களான ஜோஹோ, டேட்டா பேட்டன்ஸ், டி.சி.எஸ், நியாமோ, வெப்ரக்ஸ், ஜோபின்-ஜிஸ்மி. ப்ளிப்ஸ். எஸ்.எம்.ஐ. பின்னக்கல், டீம் கம்யூட்டர்ஸ், டைமண்ட்க்ளாஸ். சுயர்சாப்ட் சொலியூசன்ஸ். ஸ்பைகா டெக், மெலன் வென்சர்ஸ், அப்போலா, டி.என்.டி. ஐ.ஜே.எல், இமெர்ஜ் டெக். க்யூப்-ஸ்கொயர், மேஜிக் ரிச். எட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்ப்ளையன் எலக்ட்ரா இ.வி. கோ-ஸ்கில், டெஸோமெட்ரிக். நார்டில். எம்.எஸ் சாப்ட்வேர் சொலியூசன்ஸ், கம்யூட்ரா போன்ற நிறுவனங்களில் 81 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்

    பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

    விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி துணை முதல்வர் மாதவன். வேலைவாய்ப்பு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி, பேராசிரியர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.

    • பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் பணியின்போது விஜயபாபு என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாஹீர் உசேன், செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி வழங்கினார்

    பெரம்பலூர்,

    தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்களை தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற 11 நபர்களில் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யாமளாதேவி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களி 9 பேர் மாவட்ட சேமநலப்படை, 2 பேர் தமிழக சிறப்பு காவல்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    • பணிநியமன ஆணைகளை மாணவர்கள் பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.
    • வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற வளாகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.தங்கபழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பிரபல முன்னணி நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 242 மாணவர்கள் பணிநியமன ஆணைகளை பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிதயன் அவசியம்,வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பணிநியமனம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார் பிரதமர்

    புதுடெல்லி:

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

    யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அதன்படி இதுவரை 3 கட்டங்களாக சுமார் 2.18 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது, ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறிய அவர், துறைமுகத் துறை மற்றும் சுகாதாரத் துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றார். விவசாயத் துறையில் பண்ணை இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • 1,314 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
    • வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களில் படித்த 1,314 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற் றார். வேலை வாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், கோவை சி.டி.எஸ். இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு 1,314 மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.

    அதற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவ-மாணவிகள் பொறியியல் பட் டம் படித்து முடிக்கிறார்கள். இதில் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே என்ஜினீயரிங் தொடர்பான வேலை கிடைக்கிறது. மற்ற 80 சதவீதம் பேர் பல்வேறு துறைகளில் வேலைகள் பெறுகிறார்கள். இதனை தவிர்த்து என்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் டீன் மாரிசாமி, பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரம ணியன், பி.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தராஜன், பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பரங்கிரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புத்துறை பேரா சிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    • மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.
    • இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, சேலம் ,கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்த 1,365 பேரில், 339 பேருக்கு தேவையான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 5- வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 468 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய முகாமில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். நானும் ஒரு பி.இ., பட்டதாரி. படித்து முடித்தவுடன், எத்தனையோ தகவல்களை தெரிந்து நேர்காணலுக்கு செல்லும் போது, சில இடங்களில் சோபிக்க தவறியது உண்டு. 10 நேர்காணலை சந்தித்து அதில், இரண்டில் தேர்வான நிலை இருந்தது. பெங்களூரில் பணியாற்றிய போது எனக்கு வேலை பிடிக்கவில்லை. பின்னர் வங்கி, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றினேன். மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம், வேலைவாப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த 46 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு மகளிர் கலைகல்லூரி முதல்வர் கோவிந்தராசு, கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மன்றத்த தலைவர் காயத்ரிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
    • 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 225 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 3 பேரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து, அவர்களின் கேரரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, 3 சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, உடனடியாக அவரது மனுவினை பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளிக்கு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

    கூட்டத்தில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து, கரட்டுப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரட்டுப்பட்டி கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, கோவில் முன், பந்தல் அமைத்தோம். அப்போது, ஒரு சிலர் வந்து, தடுத்ததுடன், அப்பகுதி, அவர்களுக்கு பாத்தியப்பட்டது, எனவே கோவிலை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் உதவியுடன் பந்தல் அமைத்தோம்.

    எங்கள் பகுதியில் உள்ள சிலர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து, வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும், எங்கள் கோவிலுக்கு பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×