search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் வசூல்"

    • சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது.
    • பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள மணிமேகலை தெருவில் உதயா டிரேடர்ஸ் தொழிற்பயிற்சி மையத்தை மதுரையை சேர்ந்த சுந்தரம் என்பவர் நடத்தி வந்தார்.

    இங்கு அளிக்கப்பட்ட சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது. மேலும், பயிற்சி முடித்தவர்கள் உற்பத்தி செய்யும் கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கிரயான்ஸ், கலர் பென்சில் போன்ற பொருட்களை எங்களிடமே விற்று மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், இதற்கான பயிற்சி அனைத்தும் இலவசம் எனவும் கூறி, ஒரு நாளைக்கு 875 ரூபாய் வருமானம் வரும் என்று கூறி விளம்பரம் செய்தார்.

    இதனை நம்பி விருத்தாசலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.5000/-என சுந்தரத்திடம் கொடுத்தனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்படுமென பணம் கட்டிய பெண்களிடம் சுந்தரம் கூறியுள்ளார். இதனையேற்ற பெண்கள் பயிற்சி வகுப்பில் சேர சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.

    அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சுந்தரத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயிற்சி பெற பணம் செலுத்திய பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்ததை அறிந்த பெண்கள், கண்ணீர் மல்க தங்களின் குடும்பத்தாருடன் பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்த போலீசார், பயிற்சி மையத்திற்குள் சென்றனர். அங்கு எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகாரினை பெற்று, பயிற்சி மையத்தை தொடங்கி பெண்களிடம் பணம் வசூல் செய்த சுந்தரம் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான சுந்தரத்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

    • அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சிறப்பு கட்டண ரெயில்களை தான் தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் கட்டணத்தை விட அதிகமாகும்.

    ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களை நாடுகின்றனர். ஆனால் ரெயில்வே நிர்வாகமும் தனியாரிடம் சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கிறது.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளத்திற்கு 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3 ஜோடி சிறப்பு ரெயில்கள் பிரீமியம் கட்டணத்தில் இயக்கப்படும் என தனியார் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

    அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனத்தின் கோரிக்கை செயலாக்கத்தில் உள்ளது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி இருந்தாலும் இன்று (திங்கட்கிழமை) அனுமதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

    சென்னையில் இருந்து 9, 10, 11-ந்தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மறுபுறம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தனியார் நிறுவனம் அறிவித்துள்ள கட்டணம் குறித்து ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் போர்ட்டல் நேற்று டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை முடக்கியது.

    இது குறித்து அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்குவதாகவும் இந்த பயணங்களுக்கான முன்பதிவு விருப்பங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும்" என்றும் தெரிவித்தார்.

    மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், "தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இருப்பினும் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க தனியார் ஆபரேட்டருக்கு வசதி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3 அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூ.2000, 2-ம் வகுப்பு படுக்கைக்கு ரூ.3000 என தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது" என்றார்.

    சிவகாசியை சேர்ந்த காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ஜெயசங்கர் கூறும்போது, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னைக்கு செல்கின்றனர். ஆம்னி கட்டணத்தை குறைக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து செங்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு 2 சிறப்பு ரெயில்கள் தேவை என்றார்.

    • பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இத்திட்ட பயனாளிகளின் (கே.ஓய்.சி) ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவன ஊழியர்கள் இணைய வசதி கொண்ட செல்போன், மடிக்கணினியுடன் சென்று பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் வாழப்பாடி பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக, ஒரு நபருக்கு ரூ. 30 வீதம் பணமும், ஆதார், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் வசூலித்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்திய தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பணம் மற்றும் ஆவணங்கள் வங்கியது உண்மை என தெரியவந்ததால், தனியார் நிறுவன ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், பணத்தையும், ஆவணங்களையும் பொதுமக்களிடமே திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப் குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வகுமார் செல்போன் மூலம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு பிரதாப் குமாரிடம் கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக செல்வகுமார், பிரதாப் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப் குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    • தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டபின் அ.தி.மு.க. மாநகராட்சி மன்றகுழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிராம தெரு ரயில்வே சுரங்க பாதை பணிகள் மிக மந்தமாக நடைபெறுகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. வீடுகளை அகற்றியவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. ரெயில்வேயும் தமிழக அரசும், மாநகராட்சியும் ஒருவருக்கொருவர் காரணங்களை கூறி கொண்டிருக்கின்றனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக ஊழியர்கள் விடுமுறையில் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. மழைக்காலத்தில் மாநகராட்சிக்காக வேலை பார்த்த அடிமட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சி ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி உள்ளனர். அதை உடனே வழங்க வேண்டும். திருவொற்றியூர் சுடுகாட்டில் தனி நபர் ஒருவர் பண வசூல் செய்கிறார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் பண வசூல் தொடர்கிறது.

    இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எனது வார்டில் உள்ள கோத்தாரி என்ற நிறுவனம் மழை நீர் கால்வாயை உள்ளடக்கி தனது எல்லையை பென்சிங் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ. தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்கள் தி. மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. எங்கள் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு இந்த வெற்றி முதல் படியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கும் அட்டை பதிவு செய்யும் நேற்று முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் பொதுமக்களிடம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பகுதியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கும் அட்டை பதிவு செய்யும் நேற்று முகாம் நடந்தது.

    இந்த முகாமில் பொதுமக்களிடம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் சௌமியா ஆகியோர் தலைமையில் கட்சியினர் ஊராட்சி சேவை மையத்தை முற்றுகையிட்டனர். மேலும் பள்ளிப்பாளையம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து, முகாமில் வசூல் செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு இலவசமாக பதிவு செய்து ெகாடுக்க வேண்டும். பதிவுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என அங்கிருந்து அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி வசூலித்த தொகையை மீண்டும் பொதுமக்களிடம் திருப்பி வழங்கப்பட்டது.

    ×