search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani amman temple"

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
    • தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    புளியங்குடி அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளை யத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், பால நாகம்மன் ஆகிய தெய்வங்க ளுக்கு வைகாசி மாதாந்திர பவுர்ணமி பூஜை நடை பெற்றது.

    பூஜையை முன்னிட்டு மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் நறுமணப் பொருள்கள் உட்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள பரிகார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், 18-ம் படி கருப்பசாமி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், புற்று காளி, நாகக்காளி ரத்தக்காளி, சூலக்காளி ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • 9-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பக்தாகள் கலந்து கொண்ட பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் நாக கன்னி யம்மன், பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    9 நாட்கள் நடைபெறும் திருவிழா

    9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி, கும்மிபாட்டும் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான 8-ம் திருநாளான கடந்த 2-ந்தேதி காலை 5 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர் சன்னதியில் இருந்து குருநாதர் சக்தியம்மா தலைமையில் நேமிதம் இருந்த பக்தர்கள் 308 பால்குடம், தீர்த்தகுடம் ஊர்வலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பால்குடம், தீர்த்தகுடம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா நிறைவு

    மாலை பாலவிநாயகர் கோவிலில் இருந்து அக்னி காவடி, அலகு குத்துதல், பூப்பெட்டி, முத்துப்பட்டி மற்றும் 508 பேர் அக்னிசட்டி ஊர்வவம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். குருநாதர் சக்தியம்மா தலைமையில் ஊர்வலம் தொடங்கி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோவில், ஜெய்காளியம்மன் கோவில் முன்பு உள்ள வீதிகளின் வழியாக கோவிலை அடைந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ரத்தகாளி அம்மனுக்கு சாமபூஜை, 12.30 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் படையல் சாதத்தினை குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு வழங்கினார்.

    9-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பக்தாகள் கலந்து கொண்ட பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு பாலவிநாயகர் கோவிலில் இருந்து 204 பேர் முளைப்பாரி எடுத்து சென்றனர். மதியம் 12.30 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு அன்னாபிஷேகம், 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நாக கன்னியம்மன், பெரிய பாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 4-ம் திருநாளனா நேற்று கும்மியடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு முளைப்பாரி பாடல்கள் பாடி கும்மி அடித்தார்கள். முன்னதாக மாலையில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், நெய் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடந்தது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக 3-ம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு 21 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா மற்றும் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு 8-ம் ஆண்டு வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு வருசாபி ஷேகத்தை முன்னிட்டு 504 பால்குடம் தமிழ்நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் எடுக்கப்பட்டு விநாயகர் கோவிலில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தது.

    அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 9.20 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு விமானம் கோபுர கலசங்கள் மீது இலஞ்சி ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து முப்பெரும் பவானி அம்மானுக்கு மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் 21 வகையான நறுமணப் பொருட்கள் உள்பட பாலாபி ஷேகமும், தமிழ்நாட்டின் புண்ணிய தீர்த்தத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர், புற்று காளி, நாகக்காளி, ரத்தக்காளி, சூலக்காளி, பதினெட்டாம்படி கருப்ப சாமி, செங்காளி யம்மன், மகாகாளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    அம்மனுக்கும், புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியருக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபா ராதனை காண்பிக்கப்ட்டது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையில் காலை 9 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், திரவியாகுதி, பூர்ணா குதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கரனம், ராபர்பனம், ரக்சா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்பு இரவு 8 மணிக்கு எந்திர ஸ்தாபனம் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடியில் பவானி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • குருநாதர் சக்தியம்மா மாசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பவுர்ணமி பூஜை சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 பாலாபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணி அளவில் குருநாதர் சக்தியம்மா மாசி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து ஆன்மீக சொற்பொழிவாற்றினார். பின் மாலை 6 மணியளவில் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர் நறுமண பொருட்கள் உள்பட 21 வகை அபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், மாகாளியம்மன் பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் பெண்கள் கலந்துகொண்டு தீபமேற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு ஏற்றினர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொ ண்டனர். பவுர்ணமி பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், சவ்வாது மற்றும் 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை பற்றி கோவில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கப்பட்டது. மதியம் அறுவை அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்றது.
    • புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர், நறுமண பொருட்கள் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிறப்பு அருள் வாக்கு மற்றும் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
    • மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மாக்களுக்கு பால், தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள் பட 18 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் கார்த்திகை தீப திருநாள் குறித்து குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற் பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    • புளியங்குடி உள்ள முப்பெரும் தேவியர் கோவிலில் தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.
    • அம்மன்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகாத்தம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஐப்பசி மாதம் பெரும் பூஜை நடை பெற்றது.

    கோவிலில் உள்ள அம்மன் குருநாதர் சக்தியம்மா (ஆண்) பெண் உருவத்தில் சேலை அணிந்து அருள் வாக்கு கொடுப்பதால், வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் சேலை எடுத்து கொடுப்பார்கள்.இதனை பவானி அம்மன் நேரடியாக பெற்றுக் கொள்வதாக ஐதீகம். இதனால் பக்தர்கள் இந்த நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    30-ம்ஆண்டு ஐப்பசி மாதம் மகா பெரும் பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மன் களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தேன் சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களால் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 8 மணி கோவில் குருநாதர் சக்தியம்மா இந்நாளில் மட்டும் முழு பெண் உருவத்தில் இருந்து, ஒரு கையில் அக்னி சட்டியுடன் கொடுக்கும் அருள் வாக்கு நிகழ்வு நடந்தது. இந்த அருள் வாக்கு ஒரு வருடத்திற்கு உரிய பலனை நமக்கு கொடுக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படும் ஐதீகம்.

    பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தை வரம், திருமணத்தடை, வியாபார முடக்கம், தீராத நோய் நொடி, துன்பங்களை சரியாகும் என்பது நம்பிக்கை. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 10 மணி நேரம் அருள்வாக்கு தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 முதல் மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    திருவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கல்கத்தா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×