search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் பரவும் அபாயம்"

    • கால்வாய் வசதி செய்து தர வலியுறுத்தல்
    • ஆரணியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன்சு ற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

    திடீரென மதியம் வேலையில் ஆரணி டவுன் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ந்தது.

    இதனால் பங்களா தெருவில் சாலையில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து சாலையில் ஓடியதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

    இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திடம் சாலை சீரமைத்தும் கால்வாய் அமைத்து தர கோரி புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை சீரமைப்பு மற்றும் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.
    • பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 100- மேற்பட்ட கோழி, ஆடு, இைறச்சி கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பாளையம் எதிரே இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.

    இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    சாலை ஓரம் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • இதுவரை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.
    • தற்போது வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

     பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடைப்பெற்றது.

    5 நாட்கள் நடைப்பெற்ற இத்திருவிழாவில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடனாக பால்குடம், எடுத்தும், கிடா, கோழி பலியிட்டும் நேர்த்திகடனை செலுத்தினர்.

    அம்மனுக்கு ஊற்றிய பால் கோவில் வளாகத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கலந்து தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது, மேலும் சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் குப்பைகள் நிறைந்து சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் புழுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கோவில் வளாகத்திற்குள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இது குறித்து கோயில் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது.

    தற்போது வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த சாக்கடை கால்வாயால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் அந்தபகுதியில்உள்ள வீடுகளை சூழ்ந்தது,
    • அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.கடலூர் தேவனாம்பட்டினம் கேகே நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த சில தினங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வந்த மோட்டார் திடீரென்று பழுதானதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரக்கூடிய கழிவுநீர் முழுவதும் சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் தற்போது கழிவுநீர் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து உளளது.தற்போது வீடுகளை சுற்றியும் கழிவு நீர் முழுவதும் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இது மட்டும் இன்றி தற்போது கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லைஇதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மயக்கம் ,வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்எனவே பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதாரத்தை அதிகாரிகள் ஏற்படுத்தி நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாக்கடை கால்வாயை பல மாதங்களாக சீர் செய்யப்படாத நிலையில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பரையப்பட்டி புதூரில்அரசு நடுநிலைப்ப ள்ளி இயங்கி வருகிறது.

    இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளிக்கு அருகில் ரோட்டோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயை பல மாதங்களாக சீர் செய்யப்படாத நிலையில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.இதனை முறையாக சரி செய்ய சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும் எனவும், உடனடி யாக இதனை சரி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உள்ளிட்டவைகள் உற்பத்தியின் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகள் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே புல், பூண்டுகள் அதிகரித்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோயாளிகளை கடித்து வருகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் புதர் மண்டி கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து சுகாதார நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நோய்களை குணமாக்க அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மேலும் பல நோய்களை உண்டாக்கி வருகிறது. இதற்கு ஒரே காரணம் சுகாதாரமாக இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை சுகாதார மற்ற நிலையில் இருப்ப தால்தான். உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • புதர் செடிகள் வளர்ந்தும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது.
    • கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் (டேன்டீ) ரேஞ்ச் எண்.2 மலை மாரியம்மன் கோவில் அருகே பூமரத்து லைன்ஸ் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி தோட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் 200 மீட்டர் தொலைவில் தொழிலாளர்களுக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. அந்த கழிப்பறைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதர் செடிகள் வளர்ந்தும், பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடியிருப்பில் இருந்து நீண்ட தொலைவில் கழிப்பறைகள் உள்ளதால், இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் குடியிருப்புகளுடன் கூடிய கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிதாக கழிப்பறைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடலூர் சரவணா நகரில் துர்நாற்றத்துடன் கலங்கலான குடிநீர் வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து கடலூர் மையப்பகுதிகளில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சரவணநகர், நாராயண நகர், விஜயதாஸ் நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், கேசவன் நகர், முத்தையா நகர், அம்பேத்கர் நகர், மார்க்கெட் காலனி தானம் நகர், நவநீதம் நகர், குமரன் நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஒரு ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தண்ணீர் பழுப்பு நிறத்திலும் கலங்கலாக தண்ணீர் வருவதாக மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. மேலும் வருங்காலங்களில் மழைக்காலம் என்பதால் மேற்கொண்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நீக்க தொட்டியை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சாலை மறியலில் ஈடுபட முயற்சி
    • சார்ப்பனாமேட்டில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

    வேலூர்:

    வேலூர் சார்ப்பனாமேடு தேவராஜ் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மையத்தில் குப்பை பிரிக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இன்று அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரேசன் கடை அங்கன்வாடி மையம் போன்றவை செயல் படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    நோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் குப்பை கொட்டுவது தடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நுழைவு வாயில் அருகில் உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான கால்நடை மருத்துவமனை அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் சேரக்கூடிய குப்பைகளை கீழக்கரை நுழைவாயில் அருகில் ஈ.சி.ஆர். சாலையில் சேகரித்து வைத்து அதனை அகற்றாமல் இருந்து வருவதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடியவர்கள் முகம் சுழிக்கும் நிலை நீடிக்கிறது.

    மேலும் ஊராட்சி ஊழி யர்கள் குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள மரக்கடைக ளுக்கு தீவிபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.

    மேலும் குப்பை நெருப்பில் இருந்து உருவா கும் புகை மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்தி ணறலை ஏற்படுத்துகிறது.

    மேலும் அந்தப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்ந்து வருவதால் இப்பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×