search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
    X

    வேலூரில் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

    • சாலை மறியலில் ஈடுபட முயற்சி
    • சார்ப்பனாமேட்டில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

    வேலூர்:

    வேலூர் சார்ப்பனாமேடு தேவராஜ் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மையத்தில் குப்பை பிரிக்கப்படும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இன்று அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து குப்பை கொட்டுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரேசன் கடை அங்கன்வாடி மையம் போன்றவை செயல் படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    நோய் பரவும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் குப்பை கொட்டுவது தடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×