சாலையில் கழிவுநீர் தேங்கியதால் நோய் பரவும் அபாயம்

கால்வாய் வசதி செய்து தர வலியுறுத்தல் ஆரணியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது
கழிவுநீர் சாலையில் ஓடிய காட்சி.
கழிவுநீர் சாலையில் ஓடிய காட்சி.
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன்சு ற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

திடீரென மதியம் வேலையில் ஆரணி டவுன் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ந்தது.

இதனால் பங்களா தெருவில் சாலையில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து சாலையில் ஓடியதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திடம் சாலை சீரமைத்தும் கால்வாய் அமைத்து தர கோரி புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை சீரமைப்பு மற்றும் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com