search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அரசு மருத்துவமனையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் அவலம்
    X

    ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகம் புதர் மண்டி கிடப்பதை படத்தில் காணலாம்.

    ஓமலூர் அரசு மருத்துவமனையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் அவலம்

    • பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது கடந்த 2 மாதங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உள்ளிட்டவைகள் உற்பத்தியின் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம காய்ச்சல் மற்றும் சளி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினமும் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகள் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே புல், பூண்டுகள் அதிகரித்து புதர் மண்டி கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோயாளிகளை கடித்து வருகிறது. இதன் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் புதர் மண்டி கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து சுகாதார நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நோய்களை குணமாக்க அரசு மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மேலும் பல நோய்களை உண்டாக்கி வருகிறது. இதற்கு ஒரே காரணம் சுகாதாரமாக இருக்கக்கூடிய அரசு மருத்துவமனை சுகாதார மற்ற நிலையில் இருப்ப தால்தான். உடனடியாக அரசு மருத்துவமனை நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×