search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி கூட்டம்"

    • விருதுநகரில் 15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை.
    • சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.

    அப்போது விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்பட வில்லை. தற்போது பல இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு கமிஷனர் லீனாசைமன் பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு 12 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டுமென்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலானோர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அண்மை யில் விருதுநகரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான நட டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராமச்சந்திரன் பேசுகையில், எனது வார்டில் 73 வீட்டின் உரிமைதாரர்கள் டெபாசிட் தொகை கட்டி உள்ளனர். ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவில்லை. எனவே டெபாசிட் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வே பீடர் ரோட்டை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் தனலட்சுமி துளசிராம், கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் எட்வின் பிரைட் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பலர் தாங்கள் தேர்ந்தெடுக் கப்பட்டதிலிருந்தே கூட்டத்தின் போது ஒலிபெருக்கி வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை செய்து தரப்படாததால் கவுன்சிலர்கள் கலையரசன், முத்துராமன் உள்ளிட்டோர் கூம்பு வடிவ குழாய் மூலம் பேசினர்.

    இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்திற்குள் ஒலிபெருக்கி வசதி செய்து தரப்படுமென தலைவர் மாதவன் மற்றும் கமிஷனர் லீனா சைமன் ஆகியோர் உறுதி கூறினர்.

    எங்கு சென்றாலும் மக்கள் ெரயில்வே பீடர் சாலையை எப்போது சீரமைக்க போகிறீர்கள் என கேட்கும் நிலை உள்ளதால் அதனை உடனடியாக ஆக்கிரமிப்புக ளை அகற்றி சீரமைக்க வேண்டுமென கவுன்சி லர்கள் முத்துராமன், முத்துலட்சுமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் மாதவன் உறுதி அளித்தார்.

    கவுன்சிலர் முத்துராமன் தனது வார்டில் வேலுச்சாமி நகரில் மின் மோட்டார் இயக்கப்படாததால் குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும், கவுன்சிலர் முத்துலட்சுமி தனது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் நோய் பரவுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முறையாக நடைபெற வில்லை என புகார் கூறப் பட்டது.

    கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

    பள்ளிகளில் நோய் பாதிப்பை தடுக்க பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டுமென கவுன்சிலர் ஜெயக்குமார் வலியுறுத்தி னார். புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் திறக்க வேண்டும் என காங்கிரஸ் 

    • காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தர விட்டதற்கும், இந்தியாவி லேயே முன்மாதிரி திட்டமாக மாணவ, மாணவிகள் கல்வி தரத்தில் உயர வேண்டும் என்ற மேலான எண்ணத்தில் வரலாற்று சாதனை திட்டமான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்த தற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார்
    • ஆரணி கவுன்சிலர்கள் அதிர்ச்சி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

    இதில் நகர மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

    நேற்று ஆரணி நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு முன்னிலை வகித்தார். ஆணையர் குமரன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.

    முன்னதாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கபட்ட நகர மன்ற தலைவர், துணை தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    நகரமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்த பழனி என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.

    அப்போது வைகை கூட்டுறவு அங்காடி-2ல் வழங்கபட்ட அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக கூறி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணியிடம் முறையிட்டார்.

    அவரிடம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் உங்களை யார் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள். தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவ லகத்திற்கு செல்லுமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக பழனியை சமரசம் செய்து கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர் கூறினார்.
    • அனைத்து தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை யில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை தூர்வாருதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தல், குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு தனிஅறை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையாதாஸ் பேசுவதற்கு எழுந்தார். ஆனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • திருமங்கலத்தில் தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படும்.
    • நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன் அதியமான், ஆணையாளர் டெரன்ஸ் லியோன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் முத்து வரவேற்றார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தனர். தலைவர் ரம்யா முத்துக் குமார் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தின்படி திருமங்கலம் நகரில் 1,952 தெருவிளக்குகளை பொது மக்களின் நலன்கருதியும், நகராட்சி நிதி நிர்வாகத்தை கருதியும் எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்ற வேண்டும் என்றார்.

    இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். திருமங்கலம் நகரில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் விரைவில் எல்.இ.டி.தெரு விளக்குகளாக மாற்றுவது எனவும், இதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்வதும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல் நகரின் விரிவாக்கப்பகுதிகளில் 534 எல்.இ.டி. தெரு விளக்குகள் புதிதாக அமைக்க ரூ.1 கோடியே 7லட்சத்து 70 ஆயிரம் மாநில நகர்ப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைப்பதும் என்றும் முடிவு செய்யப் பட்டது.

    இந்த திட்டத்தின் நிதியை நகராட்சிக்கு கடனாக வழங்குவதுடன், இந்த கடனை 6 ஆண்டுகளுக்குள் 5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் 6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்றுதல் உறிஞ்சு வாகனம் வாங்குவது, 15-வது நிதிக்குழு மானியத்தில் 2022-23-ல் ரூ.10.60 லட்சம் மற்றும் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் முறையே பேவர் பிளாக்சாலை மற்றும் தார்சாலை பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருமங்கலம் ெரயில்வே பீடர் ரோட்டில் யூனியன் அலுவலகம் முதல் ெரயில்வேகேட் வரையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
    • 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் நகராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.

    கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்க அனுமதிக்காத நகராட்சி ஆணையரை கண்டித்து காங்கிரஸ், அமமுக, பாமக சேர்ந்த 7 உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

    • கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார்.
    • நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:- பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார். அவரையும் வரி வசூல் செய்ய அழைத்து விடுகின்றீர்கள். அதனால், தண்ணீர் சப்ளை பாதிக்கிறது .எனவே கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.

    ராஜசேகரன், (தி.மு.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. சென்ற வாரத்தில் நகராட்சி கூட்ட அரங்கில், அமைச்சர் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. அதற்கு அழைப்பு இல்லை. பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது அதன் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். நகராட்சி தலைவர் கவிதா மணி : இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த 6 வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி : - ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். என்று பேசினார் அப்போது இடைமறித்த 18 வது வார்டு பாஜக. நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, நகர்மன்ற கூட்டத்தில் உள்ளூர் விஷயத்தை பேசுங்கள் என கூறினார். இதற்கு பதில் அளித்த ஈஸ்வரமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இந்த கூட்டத்தில் பேசலாமா, நான் எனது கருத்தை இங்கு பதிவு செய்வதற்கு உரிமை உள்ளது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் இருவரையும் சமரசம் செய்தார். பின்னர் 12 வது வார்டு அண்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி அமைப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தேவகோட்டையில் நகராட்சி கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து கடும் விவாதம் நடந்தது.
    • ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத்தலைவர் ரமேஷ்:-தற்போது ஆக்கிர மிப்பு அகற்றியதில் பூ கடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் விரிவாக்கத்தில் பூக்கடைகளுக்கு இடம் வழங்க வேண்டும். ஆணை யாளர் போல் போலி கையெழுத்து போட்டு மின் இணைப்பு வாங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

    தலைவர்:- ஆணையாளர் போல் போலி கையெழுத்து போட்டது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் (தி.மு.க.):- பஸ் நிலையம் உட்புறம் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டது. தற்போது அவை செயல்படவில்லை. இதனால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    தலைவர்:- உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்து பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகர்மன்றத் உறுப்பினர் கமலக்கண்ணன் (அ.ம.மு.க):- ஆக்கிரமிப்பு அகற்றியது நகராட்சியா? அல்லது காவல்துறையா? இதில் காவல்துறை ஏன் தனியாக செயல்படுகிறது?

    தலைவர்:-இது குறித்து காவல்துறையில் கேட்ட போது அதிகாரம் உள்ளது என்கிறார்கள்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. 

    • கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
    • ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதங்கள் வருமாறு:-

    முபாரக் அலி (தி.மு.க):- எனது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளை கூட கடித்து ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளனர். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர் கு.பாப்புகண்ணன்:- தெரு நாய்களை பிடிக்க அரசுக்கு எழுதியுள்ளோம். விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீனிவாசன் (தி.மு.க):- எனது வார்டில் குளத்துபுஞ்சை தெரு அருகேயுள்ள மழைநீர்வடிகால் முற்றிலும் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யவேண்டும்.

    தலைவர்:-நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகராஜ் (அ.தி.மு.க):- எல்.இ.டி விளக்குகள் பொருத்தும்பணி எப்போதும் தொடங்கும்

    தலைவர்:-எல்.இ.டி பல்புகள் வந்துவிட்டது.உடனடியாக பொருத்தும் பணி தொடங்கப்படும்.

    ஸ்ரீதரன் (திமுக):- அமராவதி ரவுண்டானாவில்அமராவதி ஆற்றின் சிறப்பை வலியுறுத்தும் அமராவதி அன்னை சிலை எப்போது அமைக்கப்படும்.

    தலைவர்:- தனியார் பங்களிப்பை தவிர்த்து நகராட்சி சார்பிலேயே வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் நிதி மின்விளக்குகள் மற்றும் மார்க்கெட் கட்டிடம் கட்ட நிதி வழங்கிய முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மன்ற பொருளாக 37 தீர்மானங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், எஸ்.டி.நாகராஜ், துரை சந்திரசேகர், முபாரக் அலி, உஷ்–சானா பானுஷேக்பரித், சக்திவேல், ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
    • நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    காங்கயம் : 

    காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 40 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நகராட்சி ஊழியா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். 

    • கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.
    • ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் மு.மத்தீன் தலைமையில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. உடுமலை நகராட்சிப்பகுதிகளில் நகராட்சி மூலம் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு ஏரிப்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென இணைப்புகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணைத்தலைவர் கலைராஜன் பேசியதாவது:- ஒன்றுக்கும் மேற்பட்ட சிறிய கடைகள் கட்டி வாடகைக்கு விடும்போது தனித்தனியாக மின் இணைப்பு பெறப்படுகிறது. அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. ஆனால் ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    அதுபோல பின்னால் ஒரு வீடு ,முன்புறம் சிறு கடை இருந்தாலும் தனித் தனியாக வரி விதிக்கப்படுகிறது. இது பொதுமக்களை கசக்கிப் பிழியும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கழிவறை மற்றும் குளியலறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாதாள சாக்கடைக்கான வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் கலைவாணி, விஜயலட்சுமி, ஆறுச்சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.

    ×