search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்
    X

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்

    • காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தர விட்டதற்கும், இந்தியாவி லேயே முன்மாதிரி திட்டமாக மாணவ, மாணவிகள் கல்வி தரத்தில் உயர வேண்டும் என்ற மேலான எண்ணத்தில் வரலாற்று சாதனை திட்டமான காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்த தற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×