சோளிங்கரில் நகராட்சி கூட்டம்

வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள்ர விவாதம் செய்த போது எடுத்த படம்.
நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள்ர விவாதம் செய்த போது எடுத்த படம்.
Published on

சோளிங்கர்:

சோளிங்கர் நகராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.

நகராட்சி துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.

கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்க அனுமதிக்காத நகராட்சி ஆணையரை கண்டித்து காங்கிரஸ், அமமுக, பாமக சேர்ந்த 7 உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com