search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேடும் பணி"

    • தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.
    • கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தில் இருந்து அண்டை நாடான இலங்கை கடல் வழியாக 30 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக இருநாட்டில் இருந்தும் சமூகவிரோதிகள் படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், தங்கம், மஞ்சள், மருந்துகள், பீடி இலைகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது. தங்க கடத்தல் குறித்து தகவல் அறிந்து உடனே கடலோர காவல் படை போலீசாரும் நடுக்கடலிலேயே கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டுவரும் தங்க கட்டிகளை நடுக்கடலில் வீசுவதும், பின்னர் பல நாட்கள் போராடி போலீசார் அதனை மீட்பதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் இருந்து ஒரு படகு மூலமாக ராமேசுவரத்துக்கு தங்கம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர போலீசார் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடையே ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்றது. உடனே கடலோர போலீசார் அந்த படகை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். இதை பார்தத கடலில் இருந்த கடத்தல்காரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்க கட்டிகளை கடலில் வீசியதாக தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் படகை மறித்த போலீசார் அதில் இருந்த 3 பேரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தங்கம் கடலில் வீசியது தெரியவந்தது. ஆனால் அதன் அளவு எவ்வளவு என்பது தெரியவில்லை.

    கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் நேற்று நீச்சல் தெரிந்த கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடைபெற்ற தேடுதலில் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாலையில் தேடும் பணி கைவிட்ட போலீசார் இன்று காலை அந்த பகுதியில் நீச்சல் வீரர்கள், கடலில் மூழ்கும் பயிற்சி பெற்ற ஸ்கூபா டை வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மூலம் கடலில் குதித்து 2 நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள் மதிப்பு எவ்வளவு? யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது? மூளையாக செயல்பட்டது யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை
    • மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நகோமி(41), இவர்களது மகள் ஜாஸ்மின்(19).

    இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் பள்ளிவிளை அம்மன்கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பவின்(21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும்வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஜாஸ்மினை மீட்டு வந்தனர். பின்னர் தோட்டியோடு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.

    பின்னர் மீண்டும் 20 நாட்கள் கடந்த நிலையில் ஜாஸ்மின் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 29.9.2023 அன்று ஜாஸ்மின் மீண்டும் மாயமானார். இந்த நிலையில் மகளை மீட்டு தரகோரி நகோமி வடசேரி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகோமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மகளை மீட்டு தரகோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரணை நடத்த வடசேரி போலீசுக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வடசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது
    • 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர்.

    குளச்சல் :

    குளச்சல் துறை முகத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 பேர் கடந்த 25-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது. இதனால் கடலில் குதித்த மீனவர்கள் கரையை நோக்கி நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது. 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஆரோக்கியம், ஆன்றோ, பயஸ் ஆகிய 3 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதில் பயஸ் உடல் நேற்று மீட்கப்பட்டது. மற்ற 2 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

    மீட்கப்பட்ட பயஸ் உடல் விசைப்படகு மூலம் நேற்றிரவு குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிரேத பரிசோதனைக்காக பயஸ் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பலியான மீனவர் பயசிற்கு மேரி ஸ்டெல்லா (50) என்ற மனைவியும், பிரதீப் (26) என்ற மகனும் உள்ளனர். .

    குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர். இம் மீனவர்களை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பஷீர்கோயா, ஏரோணிமூஸ், ஆனக்குழி சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்த்து ஆறுதல் கூறினர்.

    • வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை 2-வது நாளாக தேடி வருகின்றனர்
    • இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரியா தனது வீட்டின் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு குளிக்க சென்றார். அதை தொடர்ந்து தான் எடுத்து வந்த செல்போன் மற்றும் காலணிகளை கரை யில் வைத்து விட்டு கீழ் பவா னி வாய்க்காலில் இறங்கி உள்ளார். கீழ்பவா னி வா ய்க்கலில் பாசனத்தி ற்காக அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டு உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலின் இரு கரை களையும் தொட்டபடி தண்ணீர் வேகமாக செல் கிறது. தண்ணீர் அதிகளவில் சென்றதால் பிரியா வாய்க்காலில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர் மற்றும் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீழ்பவானி வாய்க்கா லில் இறங்கி பிரியாவை தேடினர். ஆனால் பிரியா குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து அவர்கள் தேடி வருகிறன்ற னர். இந்த நிலையில் இன்று காலை முதல் 2-வது நாளாக தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் வாய்க்காலின் பல பகுதி களில் அவரை தேடி வருகி ன்றனர்.இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். 

    • கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்
    • மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் டிட்டோ. இவருக்கு சொந்தமான விசைப் படகு மூலம் கடந்த 5-ந் தேதி, 10 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 14-ந் தேதி இரவில் ராக்கப்பன் என்பவர் படகை இயக்கினார். மற்ற மீனவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது படகு திசை மாறி செல்வதை அவர்கள் உணர்ந்தனர். உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, ராக்கப்பனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், நங்கூ ரமிட்டு படகை நிறுத்தினர். பின்னர் ராக்கப்பனை படகு மற்றும் கடலுக்குள் தேடினர். இதுகுறித்து குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று தேங்காய் பட்ட ணம் துறைமுகத்துக்கு வந்த விசைப்படகு மீனவர்கள், ஆழ்கடலில் மாயமான மீனவர் ராக்கப்பனை கண்டு பிடிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதனை தொடர்ந்து மீனவர் ராக்கப்பனை தேடும் பணி 5-வது நாளாக இன்று நடைபெற்றது.

    • தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
    • மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.

    சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.

    • 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
    • தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.

    சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர்.

    அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசிங் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்து உடலை பிணமாக மீட்டனர்.

    ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.

    இதற்கிடையே இரவு 8 மணி ஆனதால் மிகவும் இருட்டாக காணப்பட்டது. இதனால் அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை எரங்காட்டூர் பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவகுமாரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமான பொதுமக்கள் 2-வது நாளாக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.

    • கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது.
    • இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின.

    விழுப்புரம்:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையினால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பெண்ணையாற்றில் நீர் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் கரையோர மக்க ளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது. பெண்ணை யாற்றில் வரும் நீர் திருக்கோ விலூரில் உள்ள அணையில் தேக்கி வைக்க ப்படுகிறது. இந்த அணையும் நிரம்பிவி ட்டதால் உபரிநீர் பெண்ணை யாறு, கோரையாறு, மலட்டாறு, பம்பை, நரியாறு உள்ளிட்ட ஆறுக ளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின. இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டம் திருவெ ண்ணைநல்லூர் அருகே யுள்ள டி.இடையார் கிராம த்தில் வீடு கட்டும் பணிக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி னர் அப்போது கொங்க ராயனூர்-அறள வாடி இணைப்பு தரைப்பா லத்தில் சென்ற போது பாசி வழுக்கி ஆற்றில் விழுந்தனர். அதில் கார்த்திகேயன் (வயது 38) கிராம மக்களால் மீட்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே யுள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 30), காத்தவராயன் (வயது 32) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் அடித்து செல்லப்ப ட்டனர்.

    இத்தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரையும் கடந்த 2 நாட்களாக தேடி வருகின்றனர். மேலும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக் தலைமையிலான வரு வாய் துறையினர் மற்றும போலீசார் நேற்றே சம்பவ இடத்திற்கு விரைந்த னர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில், மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொங்கராயனூர் கிராம த்திற்கு இன்று காலை ஆய்வுக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் சுந்தர்ரா ஜனை அழைத்த கலெக்டர் மோகன், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இன்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அறி வுறுத்தினார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தரைப்பாலங்கள், மேம்பாலங்களை ஆய்வு செய்தார்.

    • படகிலிருந்து தவறி விழுந்த காரைக்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார்.
    • மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்த, காரை க்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார். மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். 

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டின ச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சிவா (28) என்பவ ருடன், நேற்று அதி காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தொடர்ந்து, மீனவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கினர். இதில் மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார். அதைத்தொடர்ந்து, சக மீனவர்கள் படகில் சென்று தேடியும் சிவா கிடைக்க வில்லை. இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் மாய மான சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
    • நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

    • கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    • தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக திருவண்ணாமலை மா வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்த ப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் மீட்டனர். இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    • 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் படகின் உரிமையாளர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்த இந்த படகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் துறை ரோந்து பணி, மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2-ம் நாளான இன்றும் கடலில் மூழ்கிய கப்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் துறைமுகம் இல்லாத காரணமே படகு கடலில் மூழ்கியது. அதனால் இந்த பகுதியில் துறைமுகம் கட்டித் தரவும் மற்றும் போதுமான வசதி ஏற்படுத்தியும் தரவேண்டுமென இங்குள்ள மீனவ பொது மக்கள் சாலைமறியல் செய்யபோவதாக தெரிவித்தனர். இன்று காலை முதலே சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மீனவ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×