search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு கடலில் மூழ்கிய 2 மீனவர்களை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்
    X

    மணப்பாடு கடலில் மூழ்கிய 2 மீனவர்களை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்

    • மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது
    • 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர்.

    குளச்சல் :

    குளச்சல் துறை முகத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 பேர் கடந்த 25-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது. இதனால் கடலில் குதித்த மீனவர்கள் கரையை நோக்கி நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது. 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஆரோக்கியம், ஆன்றோ, பயஸ் ஆகிய 3 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதில் பயஸ் உடல் நேற்று மீட்கப்பட்டது. மற்ற 2 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

    மீட்கப்பட்ட பயஸ் உடல் விசைப்படகு மூலம் நேற்றிரவு குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிரேத பரிசோதனைக்காக பயஸ் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பலியான மீனவர் பயசிற்கு மேரி ஸ்டெல்லா (50) என்ற மனைவியும், பிரதீப் (26) என்ற மகனும் உள்ளனர். .

    குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர். இம் மீனவர்களை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பஷீர்கோயா, ஏரோணிமூஸ், ஆனக்குழி சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்த்து ஆறுதல் கூறினர்.

    Next Story
    ×