search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "research work"

    • வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
    • பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயிர் மேலாண்மை துறையின் கீழ், பயிர் பல்வகைப்படுத்துதல் பிரிவின் கீழ் திட்ட ஆராய்ச்சிக்கு ஓராண்டு தற்காலிக அடிப்படையில், இளம் தொழில்வல்லுநர் ஒருவரும், விவசாய பயிர்களில் விதை உற்பத்தி ஆராய்ச்சியின் கீழ் ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு மாத ஊதியம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் காலை 9 மணிக்கு பயிர் மேலாண்மை துறையில் நடைபெறும். மேலும், விபரங்களை https://tnau.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

    • பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
    • பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

    அவினாசி:

    கோவை, ஈரோடு, திருAthikadavu - Avinasi

    Survey work for phase 2 project intensifiesப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் நிறைவு பெற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: -

    பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

    இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
    • சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறி, பழம், வெங்காயம், பழம்,செருப்பு, துணிகள், பாய், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவராங்காடு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    சுற்றுவட்டாரத்தை ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வர்கள். சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து விட்டது.

    இதனால் சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    நேற்று கடைகள் அமையுள்ள இடத்தை நகராட்சி சேர்மன் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது.
    • இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின.

    விழுப்புரம்:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையினால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பெண்ணையாற்றில் நீர் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் கரையோர மக்க ளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது. பெண்ணை யாற்றில் வரும் நீர் திருக்கோ விலூரில் உள்ள அணையில் தேக்கி வைக்க ப்படுகிறது. இந்த அணையும் நிரம்பிவி ட்டதால் உபரிநீர் பெண்ணை யாறு, கோரையாறு, மலட்டாறு, பம்பை, நரியாறு உள்ளிட்ட ஆறுக ளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின. இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டம் திருவெ ண்ணைநல்லூர் அருகே யுள்ள டி.இடையார் கிராம த்தில் வீடு கட்டும் பணிக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி னர் அப்போது கொங்க ராயனூர்-அறள வாடி இணைப்பு தரைப்பா லத்தில் சென்ற போது பாசி வழுக்கி ஆற்றில் விழுந்தனர். அதில் கார்த்திகேயன் (வயது 38) கிராம மக்களால் மீட்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே யுள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 30), காத்தவராயன் (வயது 32) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் அடித்து செல்லப்ப ட்டனர்.

    இத்தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரையும் கடந்த 2 நாட்களாக தேடி வருகின்றனர். மேலும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக் தலைமையிலான வரு வாய் துறையினர் மற்றும போலீசார் நேற்றே சம்பவ இடத்திற்கு விரைந்த னர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில், மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொங்கராயனூர் கிராம த்திற்கு இன்று காலை ஆய்வுக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் சுந்தர்ரா ஜனை அழைத்த கலெக்டர் மோகன், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இன்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அறி வுறுத்தினார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தரைப்பாலங்கள், மேம்பாலங்களை ஆய்வு செய்தார்.

    • சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை ஆராய்ச்சி பணிக்கு வழங்கலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்வித்துறையின் அரசாணையின் படி சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள், ஆகியவற்றை தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டு உள்ளது.

    இந்த மாதிரியான தொன்மையான ஆவண ங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

    மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னணு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.

    இது தொடர்பாக பொது மக்கள், நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் தங்கள் வசம் இருந்தால், சிவகங்கை மாவட்ட கலெக்டருகக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாது காக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

    இதுகுறித்த விவர ங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவாிக்கும், 94450 08149 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 04575 - 240392 என்ற அலுவலக எண்ணிற்கும் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×