search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athikadavu- Avinasi"

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
    • தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஈரோடு மாவட்டம் பவானிஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

    இங்கு ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரைநீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045) நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை நீரேற்று முறையில் செயல்படுத்திட தமிழக அரசின் மூலம் ரூ.1652.00 கோடிக்குநிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், ரூ.1756.88 கோடிக்குதிருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணைமற்றும் ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி ,போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது (மொத்தநீளம் 267.5 கி.மீ) மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தற்சமயம் சுமார் 797.40கி.மீ. அளவு குழாய் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

    மின்கம்பங்கள் அமைக்கும் பணிமற்றும் பூமிக்கடியில் மின்சாரதொடரமைப்புகள் பதிக்கும் பணி100 சதவீதம் முடிவுற்றுள்ளது (மொத்தநீளம் 63.15 கி.மீ) பயன்பாட்டு உரிமை பெறும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.

    இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1624.7 3கோடிஅளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் சோதனைஓட்டம் தொடங்கப்பட்டுத ற்போதுவரை ஆறு நீரேற்றுநிலையங்கள் மற்றும்பிரதானக் குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக் குழாய்கள் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனைஓட்டம் நடைபெற்றுவருகிறது. 

    • பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
    • பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

    அவினாசி:

    கோவை, ஈரோடு, திருAthikadavu - Avinasi

    Survey work for phase 2 project intensifiesப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் நிறைவு பெற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: -

    பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.

    இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×