search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தேர்வு முகமை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
    • நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

    நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், மார்ச் 3-ந்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கியூட் முதுகலை தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
    • இந்த ஆண்டு ஜூன் 5 -ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • கியூட் முதுகலை தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
    • இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தின் இடையில் வழங்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1 முதல் 10-ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தின் இடையில் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    கியூட் இளங்கலை தேர்வு மே 21-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2023, மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
    • ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில், 2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    மேலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 26-ம் தேதி தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கியூட் தேர்வு மே மாதம் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
    • கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    இதற்கிடையே, கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை கடந்த 16ம் தேதி வெளியிட்டது.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் 3.05 லட்சம் பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மாலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா மற்றும் இந்தியாவுக்கு வெளியே என மொத்தம் 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.
    • கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆறு கட்டங்களாக நடத்தியது. இந்தியாவில் 259 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே ஒன்பது நகரங்களிலும் என 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே, கியூட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியாகவில்லை.

    இந்நிலையில், கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று அதிகாலை வெளியிட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ×