search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை மின்நிலையம்"

    • துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில், செப்.24-

    செம்பொன்விளை, சேரமங்கலம் மற்றும் முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, சைமன்காலனி, கீழ்க்கரை, குளச்சல், மிடாலக்காடு, பிடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, பத்துறை, குப்பியன்துறை, பாலப்பள்ளம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, பேயன்குழி, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அடிகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூர்கரை, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூர், மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினார் குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தக்கலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நன்னிலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்மினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,

    குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர்,

    ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.

    இந்த தகவலை திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபா தெரிவித்துள்ளார்.

    • பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.
    • ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் விவசாயமும், தொழில்வளமும், வேலை வாய்ப்பும் மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.தொழில் வளர்ச்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்துக்கான மின்தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் மட்டும் 13 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணியும் துவங்கியுள்ளது.

    அதன்படி காங்கயம் பெரியார் நகரில் ரூ. 1.62 கோடி மதிப்பில், பல்லடம் நாரணாபுரத்தில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு துணை மின்நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் - முத்தணம்பாளையம் கிராமம், அமராவதிபாளையம், உகாயனூர் கிராமத்தில் துணை மின்நிலையங்கள் அமைய தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு காளிபாளையம் கிராமம் தாண்டாக்கவுண்டன்பாளையம், நெருப்பெரிச்சல், காவிலிபாளையம், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, அணைப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதி, கூலிபாளையத்திலும் துணை மின்நிலையம் அமைய உள்ளது.காங்கயம் மடவிளாகம், கத்தாங்கன்னி, கம்பளியாம்பட்டி பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பல்லடம் - காங்கயம் ரோடு துணை மின்நிலையம், விஜயாபுரம் துணை மின்நிலையம், தாராபுரம் - சங்கராண்டாம்பாளையம், சக்திபாளையம் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருகிறது.

    காங்கயம் தொகுதி - குறுக்கத்தி, ராசாத்தாவலசு, காடையூர், பல்லடம் - பொங்கலூர், தாராபுரம் தொகுதி- செலாம்பாளையம் துணை மின்நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு ஆயத்த பணி துவங்கியுள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருப்பூர், பல்லடம், உடுமலை மின்பகிர்மான வட்டங்களில் 13 இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம், 144 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்வினியோகம் மேம்படுத்தப்படும் என்றனர்.ன

    • நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது
    • ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    ராசாத்தாவலசு துணை மின்நிலையம்: ராசாத்தாவலசு, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின்நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

    தாசவநாயக்கன்பட்டி துணை மின்நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

    ஊதியூா் துணை மின்நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

    • ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கை ராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கீழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய கண்ண ந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார் குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    • தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்டுள்ளது.
    • நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமையில் கவுத்தம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்ட 32 இடங்களில் கவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரிக்கல்பாளையமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மிகவும் பழைமையான குமரிக்கல் உள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் துணை மின்நிலையம் அமைத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆகவே குமரிக்கல்பாளையத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • ஆற்காடு தாழனூரில் விழா நடந்தது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின்வாரிய அலுவலகத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

    ரூ.2.84 கோடியில் புதிய மின்மாற்றி

    மேல்விஷாரம் மின்வாரியஇளநிலை பொறியாளர் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே செயல்பட்டுவந்தது. அந்த அலுவலகத்தை மேல்விஷாரம் அண்ணாசாலை சவுக்கார் அப்துல்காதர் தெருவில் பொதுமக்களின் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்டது.

    இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலக திறப்பு விழாவிற்கு நகர மன்ற தலைவர் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சவுக்கார் முன்னா, நகர மன்ற துணை தலைவர் குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    16 மெகா வாட்டாக உயர்த்தம்

    அதேபோல் ஆற்காடு ஒன்றியம் தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் ரூ.2.84 கோடி மதிப்பீ்ட்டில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

    இதன் மூலம் ஆற்காடு நகரம், வேப்பூர், மேல்விஷாரம், நந்தியாலம், தாழனூர், முப்பது வெட்டி, தாஜ்புரா கூராம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்க முடியும்.

    இந்த விழாவில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் சாந்திபூஷன் இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×