search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு கிராமங்களில் நாளை மின்நிறுத்தம்
    X

    பல்வேறு கிராமங்களில் நாளை மின்நிறுத்தம்

    • ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஈச்சங்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கை ராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளுர், கீழ உளுர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய கண்ண ந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார் குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×