search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண வீடு"

    நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள தில்லை நகர் அண்ணாசாலை பகுதியில் குடியிருப்பவர் முருகேசன்(வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனது மகன் வீட்டுக்கு முருகேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரங்கநாதன் என்பவர், தினசரி மாலை நேரத்தில் முருகேசனின் வீட்டுக்கு வந்து மின்விளக்கு போட்டு செல்வார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனின் வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு ரங்கநாதன் வரவில்லை. இதை தொடர்ந்து மறுநாள், ரங்கநாதன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னையில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை காணவில்லை. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், கதவு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகையை பதிவு செய்து சென்றனர்.

    கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    ஆண்டிமடம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் வழக்கம் போல் வேல்விழி எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்றொரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.1,000-த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல் அதே தெருவில் ஜெயபிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பத்மநாபன், சகுந்தலா ஆகியோரின் வீடுகளிலும் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் நகைகள் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
    வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன். விவசாயி. இவரது வீட்டில் கடந்த 9-ந்தேதி மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அஸ்வத் நாராயணன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராபவதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 8 பவுன் நகை மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கவேலின் நண்பர்கள் 3 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). கொத்தனார். இவருடைய மகன் தாமோதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாமோதரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மாலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கண்ணன் தனது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலை பூட்டிவிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தார். இந்த நிலையில் திருமண வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், செல்வம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    திருவாரூர் மாவட்டம், ஏரவாஞ்சேரி அருகே திருமண வீட்டில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், ஏரவாஞ்சேரி அருகே உள்ள கடகங்குடியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவர் தனது வீட்டில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    இதில் கலந்து கொண்ட அவரது அண்ணன் மகன் ரஞ்சித் என்பவர் மதுபோதையில் எனக்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் நாற்காலி மற்றும் டியூப்லைட்டுகளை உடைத்ததால் மாரியப்பன் என்பவர் அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மாரியப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி மாரியப்பன் ஏரவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தார். #Tamilnews
    ×