search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு பஸ்கள்"

    தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணமாகவும் செல்வார்கள்.

    தற்போது சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.



    வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. #KeralaHC


    சென்னை நகரில் சிவப்பு வண்ணத்தில் புதிய பஸ்கள் பொங்கல் முதல் ஓடும் என்றும் முதலில் 250 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #TNBus
    சென்னை:

    சென்னையில் 3,300 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் ஓடுகிறது.

    புதிய பஸ்கள் விடப்படும் போது பழைய பஸ்கள் மாற்றப்படுகிறது. மற்ற மாநில தலைநகரங்களில் ஓடும் மாநகர பஸ்கள் கவர்ச்சியாகவும் நல்ல இருக்கைகள் கொண்டதாக உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஓடும் பஸ்கள் மிக மோசமானதாகவே உள்ளது.

    தற்போது சென்னையில் ஓடும் மோசமான நிலையில் உள்ள பஸ்களுக்கு பதில் புதிதாக சொகுசு பஸ்கள் விட போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடித்திறக்கும் கதவுகள், இருவர் அமரக் கூடிய இருக்கைகள் இடம் பெற்றுள்ளது. இந்த பஸ்கள் கரூர், பொள்ளாச்சியில் உள்ள பஸ் பாடி கட்டும் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது.

    மொத்தம் 250 பஸ்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதில் புதிய பஸ்கள் விடப்படுகிறது. புதிதாக விடப்படும் பஸ்கள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் மூலம் மாநகர பஸ்களின் நிறம் மாறுகிறது.

    புதிதாக தயாரான சொகுசு பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்த புதிய பஸ்கள் பொங்கல் முதல் சென்னை நகரில் ஓடும் என்றும் முதலில் 250 பஸ்கள் இயக்கப்படும். அதன்பிறகு படிப்படியாக 986 புதிய பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே சென்னை பயணிகள் இனி உடைந்த இருக்கைகள், உடைந்த படிக்கட்டுகள், பயமுறுத்தும் வகையில் கம்பி நீட்டிக் கொண்டு இருக்கும் ஜன்னல் போன்ற அவலங்கள் இல்லாத புதிய பஸ்களில் பயணம் செய்யலாம்.

    தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களில் தனியார் பஸ்கள் அதிக அளவில் ஓடுகின்றன. சென்னையில் மட்டுமே தனியார் பஸ்சுக்கு அனுமதி இல்லை. இதனால் பயணிகள் போக்குவரத்தில் அரசு பஸ்கள் பெரும் பங்கு வகிக்கிறது. #TNBus
    மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம். கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனவரி மாதத்திற்கு பிறகு பாலிதின் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அனைவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிலும் மிக விரைவில் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

    ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற நிலைவரும். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போக்குவரத்து துறை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்துள்ளது. ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    மேலும் 56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.


    மனித நேயத்தோடும் மக்களின் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இந்த பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்கள் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:-

    இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை இந்த அரசு சிறப்பான முறையில் எந்த பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதுகிறதோ அதை ஆற்றி வருகிறது

    எதிர்க்கட்சி என்ற முறையில் பல கருத்துக்கள் சொல்கின்றது. அதை நேரடியாக கருத்துக்கள் பரிமாறும் போதுதான் சட்டமன்றத்தில் பதில் அளிக்க இயலும். மற்றபடி இப்போது நான் கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. #Bus
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 60 பஸ்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 103 பஸ்கள், சேலத்துக்கு 77 பஸ்கள், கோவைக்கு 43 பஸ்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 111 பஸ்கள், மதுரைக்கு 30 பஸ்கள், நெல்லைக்கு 46 பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன.

    ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு புதிய பஸ் இயக்கப்படுகிறது.

    சென்னையில் பழைய மாநகர பஸ்கள் மற்றும் பழுதடைந்த பஸ்களை மாற்றி புதிய பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சென்னையில் ஓடும் மாநகர பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    அதாவது சென்னை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் மாநகர பஸ்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 சதவீதம் பேர் சென்னை மாநகர போக்குவரத்து பயணிகள் ஆவர்.

    கடந்த ஜூலை மாதம் 515 புதிய பஸ்கள் விடப்பட்டன. தற்போது மேலும் 471 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை விடப்பட்டுள்ள 986 புதிய பஸ்களில் சென்னை மாநகருக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டுமே கிடைத்துள்ளது.

    கடந்த 12 மாதங்களில் 250 பழைய மாநகர பஸ்கள் இயக்குவதற்கு தகுதியுடன் இல்லை என்று கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் 3,300 பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் கிலோ மீட்டரை கடந்துள்ளது.

    இதையடுத்து அவசர தேவைக்காக 245 புதிய மாநகர பஸ்கள் தேவை என்று கேட்டுக்கொண்ட நிலையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறும்போது, “சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 50 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அவை விரைவில் இயக்கப்படும். பஸ்களுக்கு பாடி கட்டும் பணிக்காக தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார். #Bus
    தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்கள் அரசு விரைவு பஸ்களில் இன்றும், நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். #TNGovtBus
    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 1000 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பெரும்பாலனவை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள்.

    நீண்டதூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்தநிலையில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு ‘பாடி’ கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 புதிய பஸ்கள் விடப்பட்டன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 40 பஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுக்கை வசதியுடன் முதன் முதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொகுசு, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களும் விடப்பட்டுள்ளன. இதனால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசிநேர பயணமாக பஸ் பயணத்தை மேற்கொள்கிறார்கள்


    தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவாக அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கக்கூடிய நிலை இருப்பதால் அவற்றில் இருந்து தப்பிக்க அரசு பஸ்களில் முன்பதிவு இப்போதே செய்து கொள்ளலாம். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டு இருப்பதால் தீபாவளி முன்பதிவு சிறப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. நவம்பர் 3 மற்றும் 4-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் நாளையும் முன்பதிவு செய்யலாம்.

    300 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில் சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது.

    இதுதவிர www.tn.stcin என்ற இணைய தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். #TNGovtBus
    பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    பழனி:

    கேரள மாநில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள், பாலங்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் பல கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகளையும் கேரள அரசு துரிதமாக மேற்கொண்டது. இதையடுத்து கேரள மாநிலம் மூணாறு தவிர மற்ற பகுதிகளான பாலக்காடு, குருவாயூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக பழனி கிளை அதிகாரிகளிடம் கேட்ட போது, பழனியில் இருந்து கேரள மாநில பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மூணாறு தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கேரளா, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகல் வேளையில் இயக்கப்படும் பஸ்கள் அட்டவணைப்படி வரத்தொடங்கியுள்ளன.

    இரவு நேர பஸ்கள் மட்டும் இன்னும் முறையாக இயக்கப்படவில்லை. விரைவில் அந்த பஸ்களும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேரளாவுக்கு குறைந்த அளவிலேயே பயணிகள் செல்கின்றன. ஓரிரு நாட்களில் சகஜமான நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் இணையதளம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வந்தோ பஸ்களில் தங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என்றனர்.
    ×