search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை ஓட்டம்"

    • போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
    • குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

    இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

    தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள். அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
    • இரு மையங்களும் தலா 3.6 கோடி லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது.

    திருப்பூர்,நவ : 

    திருப்பூர் நகராட்சியாக இருந்த போது 2007ல் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் எஸ்.பெரியபாளையம் பகுதியில் 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இது கடந்த 2009ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில் 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.நகரம் வளர்ச்சியடைந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை பயன்பாடு அதிகரித்தது. அதனடிப்படையில் அம்ரூத் திட்டத்தில் 640 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான பணி துவங்கியது.

    அவ்வகையில் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு மற்றும் எஸ்.பெரியபாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி துவங்கி முடிவடைந்துள்ளது. இதில் 10 மண்டலங்களாக இணைப்பு பகுதிகள் திட்டமிடப்பட்டு 17 பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர் 11 நீரேற்று மையங்கள் வழியாக உந்தப்பட்டு இந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இரு மையங்களும் தலா 3.6 கோடி லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது. ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள், 600 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதித்து கொண்டு செல்லும் வகையில் பணிகள் நிறைவடைந்து தற்போது வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது.

    முழுமையாக தயார் நிலையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் தற்போது சோதனை அடிப்படையில் சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. கழிவு நீரேற்று மையங்களிலிருந்து ராட்சத குழாய் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் பல்வேறு கட்டங்களாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.அதன்பின் கழிவு நீர் துர்நாற்றமில்லாத நல்ல நீராக மாற்றப்படுகிறது. தொடர்ந்து, ஜிக் ஜாக் முறையில் குளோரின் கலந்து பின் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் நொய்யல் ஆற்றுக்கு சென்று சேருகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலம், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு இதை வழங்கினால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் தேவைக்கு தீர்வு ஏற்படும்.பிரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் தனித்தனியாக சேகரித்து அதற்குரிய பகுதிகளில் அகற்றப்படுகிறது. இதில் மக்கும் கழிவுகளாக பிரிக்கப்படும் கழிவுகள் மற்றொரு பகுதியில் பிராசஸிங் செய்து உரமாக மாற்றப்படுகிறது.திடக்கழிவுகள் மறு சுழற்சி பயன்பாட்டுக்காக பிரித்து அதற்குரிய வகையில் கையாளப்படுகிறது. பாலிதீன் போன்ற கழிவுகள் தனியாகவும், கண்ணாடி பாட்டில் போன்ற கழிவுகள் தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    • வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
    • முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை.

    அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கூட ஒரு புதிய நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் ஒரு மாணவி சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் எமிலி டாய்ல். 22 வயதான இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் கார் டிரைவிங் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் முன்பதிவு செய்தார். ஆனாலும் பல முறை முயற்சித்தும் அவரால் குறிப்பிட்ட தேதியை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் சோதனை ஓட்டத்திற்காக பல இடங்களில் விண்ணப்பித்த அவருக்கு கடைசியாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள அந்த நகரத்திற்கு சென்று சோதனை ஓட்ட தேர்வில் பங்கேற்ற எமிலி டாய்ல் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்த அவர் முதல் விஷயமாக தான் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார்.

    இதுகுறித்து அவரது தாயார் ஆட்ரி கூறுகையில், எமிலி சோதனை ஓட்டத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதியை பெற முடியவில்லை. முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை. ஆனாலும் எமிலி தீவிரமாக இருந்து சோதனை ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.

    • ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதை யொட்டி கடந்த 2 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில்அமைந் து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகுபழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை கரையேற்றி ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கடந்த 5-ந்தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு சீரமைக்கும் பணிநடந்தது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று சின்ன முட்டம் துறைமுகத் தில் உள்ள படகு கட்டும் தளத் தில் இருந்து இறக்கி கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி குகன்படகு புதுப் பொலிவுடன் நேற்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • 1045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.
    • 1045 குளங்களில் 906 குளங்களுக்கு சோதனை ஓட்டம் முடிந்து மீதமுள்ள 139 குளங்களுக்கு இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    கோவை,

    கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றது.

    இதனால் போதிய நீராதாரமின்றி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின.

    இதற்கு தீர்வாக பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1657 கோடி மதிப்பில் அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசின் நீர்வளத்துறையினரால் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு இத்திட்ட ப்பணிக்காக ரூ.90 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.1747 கோடி மதிப்பில் இத்திட்டப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் 945 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளைக்குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில், 1045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    இத்திட்டத்துக்காக நீரேற்று நிலையங்களில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குழாய்களின் வழியாக குளங்களுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது பகிர்மானக் குழாய்களில் கசிவு ஏதேனும் உள்ளதா, குளங்களுக்கு நீர் சரியான முறையில் செல்கிறதா, அடைப்புகள் உள்ளனவா என்பன குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இத்திட்டத்தில் மொத்தம் 6 நீரேற்று நிலையங்கள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் அணைக்க ட்டில் தொடங்கி 4 நீரேற்று நிலையங்களை கடந்து, ஈரோடு மாவட்டம் வரப்பா ளையம், அந்தியூர் ஒன்றி யத்தில் எம்மாம்பூண்டியில் உள்ள 5-வது நீரேற்று நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம் அன்னூரில் அமைந்துள்ள 6-வது நீரேற்று நிலையத்துக்கு நீர் வந்து சேர்ந்தது. இத்திட்டத்தின் கீழ் 1045 குளம், குட்டைகளுக்கு நீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி, அனைத்து குளங்களுக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் தண்ணீர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் 3-வது மற்றும் 4-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 61 குளங்களில் 60 குளங்களிலும், 4-வது, 5-வது நீரேற்ற நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 391 குளங்களில் 322 குளங்களிலும், 5-வது, 6-வது நீரேற்று நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 349 குளங்களில் 353 குளங்களிலும், 6-வது நீரேற்று நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் 244 குளங்களில் 191 குளங்களிலும் சோதனை ஓட்டப்பணிகள் முடிந்துள்ளன.

    மீதமுள்ள குளங்களுக்கும் தொடர்ச்சியாக சோதனை செய்யும் பணி நடக்கிறது. தற்போதைய சூழலில் 906 குளங்களில் சோதனை ஓட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 139 குளங்களில் சோதனை ஓட்டப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர். 

    • மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது.
    • வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் மேம்பாலம் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நிலையில் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டு அதன்பிறகு தொடங்கப்பட்டது.

    தற்போது மேம்பால பணிகள் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சோதனை ஓட்டம் நடத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இன்று காலை 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலத்தை திறந்துவிட்டனர். தற்போது மேம்பாலத்தில் ஏறி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்னும் 2 அல்லது 3 நாட்கள் சோதனை ஓட்டம் இருப்பதால் காலையில் இருந்து மாலை வரை இந்த மேம்பாலத்தில் ஏறி சென்று வரலாம். மேம்பால மின்சார கம்பங்கள், சென்டர் மீடியன் வேலை, பெயிண்ட் வேலை இரவில் செய்யப்படுவதால் இந்த மேம்பால வழி தற்காலிகாமாக இரவில் இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் இந்த பாதையில் இனி நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணபதி, சரவணம்பட்டி பகுதியில் இருந்து இந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் கணுவாய் , – ஆனைக்கட்டி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையை அதாவது ஜி.என்.மில்ஸ் பாலத்தை கடந்து சத்தி சாலைக்கு செல்லமுடியும் என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருந்தது. தற்பொது மேம்பாலம் பணிகள் முடிவுற்றதால் கோவையில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னூருக்கு சென்று வர இனி எளிதாக இருக்கும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
    • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

    போடி:

    மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

    மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். 

    • 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
    • பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, வாகன காப்பக வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு கோர்ட்டு வழக்குகள் காரணமாக பஸ் நிலையம் திறப்பது தள்ளிப்போகிறது.

    இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் அதனை தற்காலிகமாக திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் முதற்கட்டமாக டவுன் பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகளை அகற்றி, பஸ்கள் வந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று பஸ் நிலையத்தை சுற்றி பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்றும் 2-வது நாளாக பயணிகள் இல்லாமல் பஸ்களை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து பாளை, புதிய பஸ் நிலையம், தச்சநல்லூர், டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    வருகிற 19-ந் தேதி முதல் முழுமையாக அனைத்து டவுன் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
    • திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அவினாசி :

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

    அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.

    ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.

    சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

    • வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.
    • 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 4-வது குடிநீர் திட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடுக்கப்பட்டு குழாய் மூலமாக திருப்பூர் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளில் கடந்த மாதம் 4-வது திட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு சோதனை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.

    ஆனால் தெற்கு மாநகர பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த மாத இறுதிக்குள் தெற்கு பகுதியில் 4-வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதியளித்தார்.

    இந்தநிலையில் நேற்று 4-வது திட்ட குடிநீர் திருப்பூர் தெற்கு மாநகர பகுதிக்கு வந்து சேர்ந்தது. சோதனை ஓட்டமாக ஆலங்காடு மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. மேயர் தினேஷ்குமார் மலர் தூவி குடிநீரை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் சாந்தாமணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    குடிநீர் பரிசோதனைக்கு உட்பட்டு வெள்ளோட்டம் விடப்படுகிறது. பகிர்மான குழாய்களில் தண்ணீர் விடப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் தெற்கு மாநகர பகுதியில் உள்ள 16 மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

    • கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்

    கோவை,

    தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இன்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்கள் என மொத்தம் கோவையில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 35 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ள வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையானது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    எனவே கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயிலை தொடங்கினால் நன்றாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    தற்போது அவர்களின் கனவு நனவாக உள்ளது. வருகிற 8-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி கோவை-சென்னை இடை யே வந்தே பாரத் ரெயில் சேவையும் தொடங்கி வைக்க உள்ளார்.வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ள செய்தி கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. இதனை யொட்டி இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக முற்பகல் கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    பின்னர் கோவையில் இருந்து சென்னைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. மதியம் 12.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து மாலை 6.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது.இன்று நடந்த இந்த சோதனை ஓட்டத்தில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்று ரெயிலில் பயணித்தனர். விரைவில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க உள்ளதும், இதனையொட்டி சோதனை ஓட்டம் நடந்ததும் கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோவை மக்கள் கூறியதாவது:-

    கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் ேசவை தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

    விரைவில் கோவை-பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் பாதுகாப்பு மட்டுமின்றி, வழித்தடத்தில் விலங்குகள் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கேற்ப ஊழியர்களை பணியில் அமர்த்தி சீரான முறையில் கண்காணிக்க வேண்டும். இந்த ரெயில் சேவைக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர்.
    • கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது


    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்க்காக பொது கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வந்தன.

    இந்த கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். பொது கழிப்பிடங்களை ஊழியர்கள் கைகளில் சுத்தம் செய்வதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு எதிர்ப்பு காட்டி வந்தது.

    கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனுவை பரிசோதித்த செயல் அலுவலர் நீண்ட நாள் முயற்சிக்கு பிறகு கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நடந்தது.

    இந்த எந்திரம் எந்த அளவு தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்கிறது என்பதையறிந்து தேவைக்கேற்றார் போல் மேலும் சில எந்திரங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என ெசயல் அலுவலர் தெரிவித்தார்.

    ×