என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driverless Metro Rail"

    • முதல்கட்ட சோதனை கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
    • 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

    பூந்தமல்லி பணிமனை நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

    • சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் சென்னை மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக சுரங்கப்பாதைகள், உயர்மட்ட பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு முதல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.


    2-ம் கட்ட திட்டத்துக்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் டெப்போவிடம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரெயில் அடுத்த மாதம் வர உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி ஆலையில் நடந்து வருகிறது.

    டிரைவர் இல்லாத மேலும் 9 ரெயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வர உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர்களுடன் கூடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை பொருத்து அது 6 பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படும்.

    டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத சோதனைகள் முடிந்துள்ளன. ரெயிலை இயக்கும் போது எந்த பிரச்சினையும் எழவில்லை.

    நாங்கள் ரெயில்களின் அனைத்து பாகங்களையும் சரிபார்த்து வருகிறோம். ரெயிலின் வேகம், அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×