search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு  டீசல் என்ஜின் ரெயில் சோதனை ஓட்டம்
    X

    மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் என்ஜின் ரெயில் சோதனை ஓட்டம்

    • 160 பயணிகளுடன் இயக்கி வெற்றி.
    • சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.

    ஊட்டி,

    நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் குன்னூா் ெரயில்வே பணிமனையில் தலைமை மெக்கானிக் மாணிக்கம் தலைமையிலான குழு, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் 2-வது என்ஜினை குன்னூரில் வடிவமைத்திருந்தது.

    அந்த என்ஜின் முதல்முறையாக 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் ெரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ அமைப்பு சாா்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.

    ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சுவிட்சா்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலை ெரயில் என்ஜின்கள், மேட்டுப்பாளையம் முதல் குன்னூா் வரை நீராவி மூலம் மட்டுமே வரை இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரியை எரிபொருளாக கொண்டு பல ஆண்டுகளாக மலை ெரயிலை இயக்கி வந்தனா். நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கரித்துக ள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்கள் வனப் பகுதிகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாலும், பா்னஸ் ஆயிலை எரிபொ ருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப் பட்டது.

    பின்னா் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில் முதல் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிம னையில் வடிவமை க்கப்பட்டது.

    இது வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இரண்டா வதாக டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.

    Next Story
    ×