search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூனியம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
    • கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார். வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கிராமத்தில் உள்ளவர்களை திடீரென மர்ம நோய் தாக்கியது. நோய் தாக்குதலில் ஒரு சிலர் இறந்தனர். அப்போது கிராம மக்கள் ரஷ்மோ மாந்திரீகம் செய்யும் சூனியக்காரி எனவும், அவர் மாந்திரீகம் செய்ததால் தான் ஊரில் நோய் பரவியதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரஷ்மோ குறி சொல்லும் குடிசைக்கு வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரஷ்மோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த லஷ்மணன் ராவ் மற்றும் சிந்தேரி அப்பாராவ் ஆகியோர் பெண் மந்திவாதி ரஷ்மோவை கொலை செய்து குடிசைக்கு வெளியே வீசியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×