search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை தொழிலாளர்"

    • தொழிலாளர் நல அதிகாரி எச்சரிக்கை
    • குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மின்னணு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தி னர் பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்களா? என்று நாகர்கோவில் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகி யோருடன் நடத்தப்பட்டது.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்க ளுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்ப டும். குழந்தை தொழிலா ளர்களை பணியில் அமர்த்து வது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிலோ, 04652-229077 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.

    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • 5. மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த. சட்டத்தினை மீறுவோர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமாகவோ அல்லது 5. மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

    இந்த சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். இரண்டாம் முறையாக இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் அல்லது பாதுகாவலருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதோ கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
    • அதிகாரிகள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காய்கறி மார்க்கெட், காந்தி ரோடு, மண்டி தெரு, பழைய புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி பாத்திர கடை மளிகை கடை நோட்டு புத்தக கடை உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் குபேரன் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வியாபாரிகளிடம் வழங்கினர்.

    இதில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு சீனிவாசன் பரமசிவம், துணை தாசில்தார் அய்யப்பன் ஆர்.ஐ. நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேர்ல்டு விஷன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வக்கீல்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளது. கல்வி இடை நிற்றலை தடுப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளின் அடிப்ப டை உரிமைகள் குறித்தும், குழந்தைத் தொழி லாளர் முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி குழந்தைத் தொழி லாளர் முறை எதிர்ப்புத் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சவுந்தர்யா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கார்த்தி கேயன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
    • கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.

    அட்டவாடி:

    திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று குழந்தைகள் தொழிலாளியாக பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.

    • சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் குழந்தை தடுப்பு படையினர், போலீசார், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககம் மற்றும் சைல்டு லைன் ஆகிய குழுவினர் நேற்று சேலம் கடைவீதி முதல் மற்றும் 2-ம் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது,' குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் மூலமாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்' என்றார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
    • 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.

    இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.

    • அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    அவிநாசி

    சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,), திருப்பூர் சைல்டுலைன் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் அவிநாசியில் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பழங்கரை, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் சேவூர், கருவலூர், தெக்கலூர், பகுதிகளில் பிரசார பயணம் நடைபெறுகிறது.இதில் சி.எஸ்.இ.டி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கருணாம்பிகை, நயினான், சின்னச்சாமி, சி.எஸ்.இ.டி., சைல்டுலைன் அமைப்பின் வைஷ்ணவி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ×